Showing posts with label பணம். Show all posts
Showing posts with label பணம். Show all posts

சென்செக்ஸ் என்ன ஆகும்??

சென்செக்ஸ் இப்போது down ward நடந்துகொண்டிருப்பது 1980ல் தொடங்கிய cyle -ன் நான்காவது பகுதி. ஐந்தாவது up-ward ல் சென்செக்ஸ் 25,000க்கும் அதிகமான புள்ளிகளுக்கு போகுமாம்.

சென்செக்ஸ் இன்னும் கீழே சென்றால் 9700 வரை செல்லுமாம் அது சரி இன்னும் எத்தனை நாள் இப்படியே இருக்கும்?

எலியட் வேவ் தியரிப்படி correction ஆனது அதற்கு முந்தைய up move ன் 0.33 ல் இருந்து 1.618 மடங்கு கால அளவுக்குள் இருக்குமாம் அதாவது 16 முதல் 77 மாதங்கள்.

இதற்கு முந்தைய correction 1994 ல் இருந்து 2003 வரை 9 வருடங்கள்.

9700க்கு கீழே சென்செக்ஸ் குறைகிறது எனும்பட்சத்தில் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும்.

FII தொடர்ந்து விற்று வருவதால்தான் இந்த அளவு வீழ்ச்சி அடைந்துள்ளது என அனைவருக்கும் தெரியும் இன்னும் 8 பில்லியன் அளவு அவர்களுடைய முதலீடு வரும் நாட்களில் வெளியேறலாம்

மேலும் விவரமாக ஆங்கிலத்தில் படிக்க இங்கே

ரிலையன்ஸ் மணி - பாஸ்ட் ட்ரேட்


ரிலையன்ஸ் மணி - பாஸ்ட் ட்ரேட்
(click the images to enlarge)




2. ஸ்க்ரிப்ட் ஆட் / டெலிட் / வாங்க / விற்க செய்வது (ரைட் கிளிக்)



3. மற்ற மெனு



Posted in Labels: |

928+

நீண்ட நான்கு நாட்கள் விடுப்பிற்கு பின் இன்றைய சந்தையில் FII-கள் 1240 கோடிக்கு பங்குகளை வாங்கியிருக்கிறார்கள். முப்பை சந்தை 928 புள்ளிகளும் தேசிய சந்தை 267 புள்ளிகளும் உயர்ந்து சிறு முதலீட்டாளர்களுக்கு ஒரு நம்பிக்கை ஒளியை தந்திருக்கிறது.

சென்செக்ஸ் 928.09 உயர்வு 6.07% 16217.49,
நிப்டி 267.65 உயர்வு 5.81% 4877.50.

BSE Midcap Index ended at 6,174.49 up 6.4%.
BSE Smallcap Index ended at 7,284.64 up 5%.


BSE Bankex closed at 8,371.34 up 8%. HDFC, HDFC Bank, IOB, ICICI Bank, Centurion bank, Axis closed in green.

BSE Capital Goods Index closed at 13,867.60 up 5%. L&T, ABB, BHEL, Suzlon, Reliance Infra, Siemens, Triveni Engineering closed higher.

BSE Auto Index closed at 4,582.05 up 4%. Apollo Tyres, Escorts, Ashok Leyland, Hind Motors closed higher.

BSE Metal Index closed at 13,607.64 up 6.4%. SAIL, JSW Steel, Jindal Steel, Jindal Stainless, Hind Zinc closed higher.

BSE FMCG Index closed up 2% at 2,226.78. HUL, Colgate, ITC, Nestle, Dabur ended higher

Oil and Gas Index closed at 10,308.80 up 6%. Cairn, Reliance, RPL, BPCL, HPCL, IOC, Reliance Natura, GAIL ended higher.

BSE IT Index was at 3,686.35 up 8%. HCL Tech, Infosys, Tech mahindra, TCS, Tech Mahindra closed higher.

இருங்கப்பா மூச்சு விட்டுக்கறேன்.

Posted in Labels: , |

சந்தை நேர மாற்றம் (Sun outage)

The Exchange has decided to change the market timings for both cash and derivatives markets during the period, March 04, 2008 to March 18, 2008 due to Sun Outage. The revised timings will be -

Market Open

09.55 a.m.

Market will remain close

11.45 a.m. to 12.25 p.m.

Market re-open

12.30 p.m.

Market Close

04.15 p.m.

Market Post Close

04.35 p.m. to 04.45 p.m.


Posted in Labels: |

பட்ஜட் 2008 - 2009

NEW UPDATES @ BROKERAGE REPORTS

சம்பளதாரர்களுக்கு பயன்மிக்க பட்ஜட்.

ஆண்களுக்கு வரி விலக்கிற்கான வருமான அளவு 1,10,000 ரூபாயிலிருந்து 1,50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பெண்களுக்கு வரி விலக்கிற்கான வருமான அளவு 1,45,000 ரூபாயிலிருந்து 1,80,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மூத்த குடிமகன்களுக்கு வரி விலக்கிற்கான வருமான அளவு 1,95,000 ரூபாயிலிருந்து 2,25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஷார்ட் டெர்ம் கேபிடல் கெயின் டாக்ஸ் அதிகரிப்பு

ஷார்ட் டெர்ம் கேபிடல் கெயின் டாக்ஸ் 10% ல் இருந்து 15% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீண்ட கால் முதலீடை ஊக்குவிக்கும் விதமாக அதிகரிக்கப் பட்டுள்ளதாக கூறப்பட்டாலும். இது பண புழக்கத்தை குறைத்து பங்குசந்தையில் பின்னடைவையே ஏற்படுத்தும்.

60000 கோடி கடன் தள்ளுபடி
யார் அப்பன் வீட்டு பணம்யா????

விரிவான மற்ற செய்திகள் பட்ஜெட்1, பட்ஜெட்2, பட்ஜெட்3

Posted in Labels: |

என்ன நடக்குது பங்குசந்தையில!?!?

என்ன நடக்குது பங்குசந்தையில!?!?

படம் பெருசா தெரிய படத்தின் மேல் க்ளிக்கவும்!




Posted in Labels: |

பங்கு சந்தை பாடம் சொன்னது - யாருக்கு?

பங்கு சந்தையை முதலீடு செய்யும் இடமாகவே பார்க்கவேண்டும். நான் முதலிலிருந்தே இதைத்தான் சொல்லிவருகிறேன். இரண்டு நாட்களாக சந்தை விழுந்து வருகிறது இந்நிலையில் இன்று காலை தமிழ்மணத்தில் ஒரு பதிவு கண்ணுக்கு தென்பட்டது ‘நடுத்தர வர்க்க யுப்பிகளுக்கு ஆப்பு வைத்த பங்கு சந்தை - அசுரனின் பதிவு’ என ஆகா எதோ நமக்கு வேண்டிய மேட்டர்தான் போல என்ன இருக்குன்னு பாக்கலாம்னு போய் பாத்தேன் அந்த சுட்டில நீங்களும் பாருங்க. ஒவ்வொரு முறை சந்தை விழும்போதும் வரும் புலம்பல்தான் இது. இதற்கு நாம் பதில் சொல்வதை விட இன்று சந்தையே 800 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து பதில் சொல்லிவிட்டது.

இன்று தமிழ்மணத்தில் பார்த்த இன்னும் இரு பதிவுகளின் சுட்டி கீழே.

பங்குசந்தை விழும்போதெல்லாம் கும்மியடிக்கும் கம்யூனிஸ்ட்கள் – தமிழ்மணியின் பதிவு

பங்கு சந்தை இனி ரத்த ஆறு ஓடட்டும் – செல்வனின் பதிவு

இந்த சுட்டிகளெல்லாம் எதெற்கென்றால் எவ்வளவுக்கெவ்வளவு படிக்கிறோமோ அவ்வளவு நம்மை கூர் தீட்டிக்கொள்ளத்தான்.

நம்ம ஊர் பக்கம் ஒரு பழமொழி சொல்வாங்க
“தினைக்கும் பிச்சை போடுற wxyz இன்னைக்கு போடலை
என்னிக்குமே போடாத மஹாலட்சுமி நீ போட்ட” – அப்பிடின்னு அது போல சந்தை பணத்தை அள்ளிக்கொடுத்த போதெல்லாம் சத்தமில்லாமல் இருந்துவிட்டு சரியும் போது கூக்குரலிடுவது அபத்தமாக இல்லை?

2005 ஆகஸ்ட்டில் சென்செக்ஸ் 7000 புள்ளிகளை தாண்ட சிரமப்பட்டது அப்போது அதுதான் உச்சம் ஆனால் இன்றைய நிலையில் சென்செக்ஸின் உச்சம் 21000 அது சற்றே இறங்கி நேற்றைய முடிவு 16720 புள்ளிகள் இன்று காலையிலிருந்தே 1000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து முடிவில் 811 புள்ளிகள் உயர்வாக 17540 புள்ளிகளில் முடிவடைந்துள்ளது.

ஏறுவதும் இறங்குவதும்தான் சந்தையின் இயல்பு. இந்த சரிவெல்லாம் தற்காலிகம்தான். 2005ல் முதலீடு செய்தவர்களுக்கு இப்போதைய சரிவு எப்படி பாதிக்காதோ அது போல முதலீட்டாளர்களை அது என்றுமே பாதித்ததில்லை பாதிக்கவும் பாதிக்காது. இழந்தது லாபத்தில் ஒரு சிறிய அளவே.

10% சந்தை சரிவதும் சந்தை 1 மணி நேரம் நிறுத்தப்படுவதும் முதல் தடவையா இல்லை இது கடந்த மூன்று வருடங்களிலேயே இது மூன்றாவது தடவை. எல்லா சரிவின் போதும் LIC, UTI மட்டுமே பங்குகளை வாங்கி சந்தையை தூக்கி நிறுத்தினால் சந்தை சரிவிற்கு அவர்களை தவிர வேறு யாரும் காரணமாக இருக்க முடியாது.

தின வணிகத்தை சூதாட்டம் என்று சொன்னாலும் தின வணிகம் இல்லை என்றால் எல்லோரும் டீமேட் ஸ்டேட்மெண்டை வைத்துக்கொண்டு நாக்கு வழிக்க வேண்டியதுதான் தேவையான சமயத்தில் டீமேட்டில் இருப்பதை பணமாக்க முடியாது.

பாதிக்கப்பட்டவர்கள் என பார்த்தால் சூதாட்ட நோக்கத்தில் ஒரு மாதத்தில் இரண்டு மடங்காக்கிவிடலாம் அது இது என சந்தையை பற்றி தெரியாமல் மற்றவர்களின் ஆலோசனை பெயரில் சந்தையில் என் புருசனும் கச்சேரிக்கு போறான் என இறங்கியவர்களே.

ஈக்விடி என்பது உங்களுக்கு நீங்கள் பங்கு வைத்திருக்கும் நிறுவனத்தில் உள்ள உரிமையை குறிப்பது உங்களிடம் உள்ள பங்கின் அளவை பொறுத்து. முதலீட்டு நோக்கோடு மட்டும் சந்தையை அணுகுங்கள்.

பொறுமை காக்கும் நேரம் இது - தென்றல்.

Posted in Labels: |

ஹாட் டிப்ஸ்

அனைவருக்கும் கொஞ்சம் தாமதமான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். என்னுடைய இன்னொரு வலைப்பூவில் நூறாவது பதிவு மற்றும் புத்தாண்டு பதிவு எல்லாம் போட்டு கொண்டாடிட்டு இங்க வர கொஞ்சம் லேட்டாயிடிச்சு.

இப்பெல்லாம் ஆபீஸ்லயும் சரி ஆபீஸ்க்கு வெளியிலயும் சரி நாலுபேர் சேர்ந்து பேச ஆரம்பிச்சாலே ஸ்டாக் மார்க்கெட் பத்திதான் இப்ப நடந்துகிட்டிருக்கிறது ‘செகுலர் புல்’லாம் எப்பாடா என்னாமா கண்டுபிடிக்கிறாய்ங்கய்யா!! பங்கு சந்தை குறியீட்டு எண் இன்னும் மூணு – நாலு வருசத்துக்கு இப்பிடியே ஏறுமுகமா இருக்குமாம் நடு நடுவே சின்ன சின்ன சரிவுகள் வந்தாலும் அதையெல்லாம் தாண்டி.

யாரப்பாத்தாலும் அதை வாங்கினியா இதை வாங்கினியா இந்த ஸ்டாக் அடுத்த வாரம் பார் பறக்க போகுது. ஒருத்தர் ஒரு பங்கை ரெக்கமண்ட் சொல்லி நாம வாங்காம தப்பி தவறி அது மேல போகுதுன்னு வைங்க உடனே அதான் நாங்க அப்பவே சொன்னம்ல. எனக்கு இந்த விளையாட்டிலெல்லாம் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை.

எனக்கு ஒரு ‘நல்ல’ கம்பெனி பங்கு வாங்கனும்னு தோணினா அத கவனிச்சு விலை குறையும்போது ஒரு சிறு அளவு வாங்கி அதன்பிறகும் விலைகுறைந்தால் திரும்பவும் ஒரு சிறு அளவு வாங்கி சேர்த்து வைத்து மூன்று மாதமானாலும் சரி ஆறு மாதமானாலும் சரி கழுதை பிக்ஸட் டெபாசிட் போட்டா வெயிட் பண்றதில்லையா கெடந்துட்டு போகட்டுமே அப்படிங்கிற இது என்ன ஊசிப்போகிற பொருளா!? இந்த அடிப்படையில தான் நான் பங்கு வர்த்தகம் செஞ்சுகிட்டு வரேன்.

என் ப்ரெண்ட்ஸ் சில சமயம் கிண்டல் செய்வதும் உண்டு அதுக்கெல்லாம் நான் கொஞ்சம் கூட கவலைப்பட மாட்டேன் சில நாட்கள் முன் என் நண்பர் ஒருவரை சந்திச்சப்ப நலமெல்லாம் விசாரிச்சு டீ எல்லாம் சாப்பிட்டதுக்கப்புறம் எப்பிடி போயிட்டிருக்கு உன்னோட ஷேர் அப்படின்னு பேச்சு திருப்பிச்சு இல்லடா எல்லாம் விட்டுட்டேன் அந்த பக்கமே போகறதில்ல ஒரு நாலரை லட்சரூவா நஷ்டம் ‘எப் & ஓ’ ல அப்படின்னார். எனக்கு ‘எப் & ஓ’ பற்றி ஒரு எல்.கே.ஜி மாணவனுக்கு அறிவு எவ்வளவோ அவ்வளவுதான் அதை பற்றி இத்தனைக்கும் என்னுடைய ‘ப்ரோகரேஜ் ஹவுஸ்’ இலவசமா பாடம் எல்லாம் நடத்துனாங்க அதுக்கப்புறமும், அதனால் அந்த பக்கமே தலை வெச்சு படுக்காம இருந்தேன். இவன் எப்ப அந்த பக்கம் போனான் ஏன் இப்படி ஆச்சு ஒண்ணும் புரியலை ஆனா ரொம்ப வருத்தமா ஆயிடிச்சு.

அதுபோல இந்த கம்மோடிடிஸ் , டெரிவேடிஸ் டிரேடிங்கும் ஒண்ணும் பிடிபடமாட்டிங்கிது உளுந்து, சோயா, தங்கம், வெள்ளி, நிக்கல் எல்லாம் எதையுமே டெலிவரி எடுக்காமலே வாங்கி வாங்கி விக்கலாமாம் மார்ஜின்ல. நான் கிராமத்துல வளந்தவன்கிறதுனால உளுந்து செடிய பாத்திருக்கேன், இட்லி தோசைக்கு பயன்படுத்துவாங்க இதுதான் உளுந்து பத்தி அதிகபட்சம் எனக்கு தெரிஞ்சது.

டெரிவேடிஸ்ங்கிறது கரன்சி ட்ரேடிங்காம் தெனைக்கும் மாறுபடற கரன்சி விலை வித்தியாசத்தை பயன்படுத்தி லாபம் சம்பாதிக்கலாமாம். ஒருவேளை இதை மட்டுமே தொழிலா செய்ய ஆரம்பிக்கும்போது பாத்துக்கலாம்னு இந்த பக்கமும் இன்னும் போகலை.

நேத்து அதாவது 4-1-08 வெள்ளிக்கிழமை என் செல்போன் அரைமணிக்கொருதரம் கொய்ங், கொய்ங், கொய்ங்னு எஸ்.எம்.எஸ்ஸா வந்திட்டிருக்கு என்னன்னு பாத்தா www.towerteammumbai.com னு ஒரு சர்வீஸ்ல இருந்து ஏழு நாள் ஃப்ரீ டரையலாம் அன்பு நண்பர்கள் யாரோ அவங்களுக்கு ரெஜிஸ்டர் பண்றப்ப இலவசம்தானே எங்க அண்ணனுக்கும் அனுப்புன்னு என் நம்பரையும் போட்டு விட்டுட்டாங்க போல.

ஒரு காலத்துல பங்குசந்தைல பயந்து பயந்து கால் வெச்ச சமயம் நாம பாட்டுக்கு எதாவது ஒரு கம்பெணி ஷேரை வாங்கி அது ஏடாகூடமாயிடிச்சினா என்ன பண்றதுன்னு ஆறு மாசத்துக்கு இரண்டாயிரம் ரூவா பணம் கட்டி ‘பவர் யுவர் ட்ரேட்’ டாட் காம்’ல சேர்ந்து சோரம் போனவங்க நாம!! இப்பல்லாம் திகட்ட திகட்ட டிப்ஸ் இலவசமாவே கிடைக்குது மோதிலால் ஓஸ்வால், ஐசிஐசிஐ டைரக்ட், ஆர் மணி, பங்குவணிகம் , சுதாகர் வலைப்பூ இதெல்லாம் இல்லாம எந்த ப்ரெண்டை மீட் பண்ணாலும் டிப்ஸ்.

கூட்டி கழிச்சி பாத்தா சில நண்பர்கள் இந்த ‘எப் & ஓ’ அது இதுன்னு விழுந்து பெரண்டு செய்யற லாபத்தைவிட ஒண்ணுமே செய்யாம ப்ளாக் எழுதிகிட்டு கமெண்ட் போட்டுகிட்டு ஜாலியா என்ஞாய் பண்ணிகிட்டிருக்க நான் எந்த விதத்திலும் % கொறைஞ்சே போயிடலை இன்னும் சொல்ல போனா என் சைடு கொஞ்சம் ஸேஃப்.

எல்லாம் சரி பிப்ரவரில இருந்து MF, FI எல்லாம் ஷார்ட் செல்லிங் அனுமதிக்கலாம்னு செபி முடிவு பண்ணியிருக்காம். எப்பிடியும் வருச கடைசிக்குள்ள சென்செக்ஸ் இருபத்திஐயாயிரம் பாயிண்ட் தாண்டீடுமாம். இது நான் உங்களுக்கு சொல்ற ஹாட் டிப்ஸ் இல்ல ஆறிப்போன டிப்ஸ்தான் இது.

Posted in Labels: |

ரிலையன்ஸ் மணி இன்ஸ்ட்டா ட்ரேட் செட்டிங்ஸ்.

ரிலையன்ஸ் மணி இன்ஸ்ட்ரா ட்ரேட் செட்டிங்ஸ்.

You are kindly requested to perform the following steps to enable INSTA TRADE

1. Open www.reliancemoney.com

2. Click on Insta Trade

3. Login with User name, password and Security Key

4. Jump to --- Select Trading

5. Click Login

6. Click Help

7. Click Misc Links

8. Click JVM

9. Save on local disk

10. Click on jvm.zip

11. Click msjavax.zip to install

12. Reboot PC

13. Sun JVM must be disabled :
Go to Internet Browser--> Tools --> Internet Options -->Advanced -->Java(Sun).
(Change this setting only if aforesaid settings are found)

14. Enable Microsoft VM :
Go to Internet Browser --> Tools --> Internet Options --> Advanced --> Java Console enabled.

Go to Internet Browser --> Tools --> Internet Options --> Advanced --> Java Logging enabled.

Go to Internet Browser --> Tools --> Internet Options --> Advanced --> JIT complier for virtual machine enabled.

15. Save all changes and re-login.

Incase if you are still unable to login to INSTA TRADE then please send us an email to customer.support@reliancemoney.co.in.

Posted in Labels: |

ஆஃப் மார்க்கெட் ட்ரான்ஸ்பர்

இந்தியாவில் NSDL (National Securities Depositary Limited), CDSL (Central Depositary Services Limited)என இரண்டு டெபாசிடரிகள் உள்ளன. ஒரே டெபாசிடரிக்கு ஆஃப் மார்க்கெட்-ல் பங்குகளை மாற்றும் போது TIFD (Transfer Instruction for Delivery) ஸ்லிப் கொடுக்க வேண்டும்.

CDSL ல் இருந்து NSDL க்கோ அல்லது NSDL ல் இருந்து CDSL க்கோ பங்குகளை ஆஃப் மார்க்கெட்டில் மாற்ற IDT (Inter Depositary Transfer ) ஸ்லிப் கொடுக்க வேண்டும்.

Off market transfer charges 0.04% of total value of the shares.

முந்தைய பதிவில் ஆஃப் மார்க்கெட் ட்ரான்ஸ்பர் எவ்வாறு செய்வது என கணேஷ் கேட்டிருந்தார். கீழே உள்ள இணைக்கப்பட்டுள்ள படங்களை பார்க்கவும்.

இது நான் ஐசிஐசிஐ டீமேட் (NSDL)ல் இருந்து ரிலையன்ஸ் மணி (CDSL)க்கு மாற்ற கொடுத்த இன்ஸ்ட்ரக்ஷன்

படம் முழுமையாக தெரிய படத்தின் மேல் க்ளிக் செய்யவும்.

டார்கெட் க்ளையண்ட் ஐடி ரிலையன்ஸ்ல் லாகின் ஆனவுடன் ட்ரேட் பக்கத்தில் டிபி ஐடி என வரும். க்ளையன்ட் மாஸ்டர் ரிப்போர்ட் என ஒரு ரிப்போர்ட் கொடுத்திருப்பார்கள் அதிலும் இருக்கும். ISIN நம்பர் உங்கள் ஹோல்டிங் டிபியிலேயே இருக்கும் அல்லது http://www.nseindia.com/ ல் இருந்து பெறவும்.







இரண்டும் ஒரே டெபாசிடரியாக இருக்கும் பட்சத்தில் கொடுக்க வேண்டிய ஸ்லிப் TIFD கீழே






Posted in Labels: |

ரிலையன்ஸ் மணி இரண்டு நாள் அனுபவங்கள்

ரிலையன்ஸ் மணி
இரண்டு நாள் அனுபவங்கள்

நேற்றும் இன்றுமாக இரண்டாவது நாளாக ட்ரேட் செய்கிறேன் இதை வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது இருந்தாலும் ஒரு அறிமுகத்திற்காக.

ரிலையன்ஸ் மணிக்கும் ஐசிஐசிஐ டீமேட்டுக்கும் மெனுக்கள் எந்த குழப்பமும் இல்லை. இதில் BSE யிலும் மார்ஜின் ட்ரேட் செய்ய முடிகிறது ஐசிஐசிஐ-ல் மார்ஜின் ட்ரேடிங் NSE ல் மட்டுமே. அனைவரும் எச்சரித்திருந்தபடியே போர்ட்டல் மிக மெதுவாகவே வேலை செய்கிறது.

ரிலையன்ஸ் மணியில் Trade Now, Insta Trade என இரண்டு வழிகளில் ட்ரேட் செய்யமுடியும் என தெரிகிறது. நான் நேற்றும் இன்றும் ட்ரேட் செய்தது Trade now எனும் சாதாரண முறை.

Insta Trade நான் டீமேட் அப்ளை செய்யும் போது அப்ளை செய்யவில்லை, எனவே நான் இந்த ஆப்ஷனில் ட்ரேட் செய்ய இன்னும் ஒரு வாரம் ஆகும் என தெரிவித்தனர். இந்த Insta Trade நம் கம்ப்யூட்டரில் டெர்மினலை கொண்டுவரும் என தெரிகிறது (real time streaming). இது எப்படி விரைவாக இருக்கிறதா என்பதை வந்தவுடன் தெரிவிக்கிறேன்.

இந்த இரண்டு தினங்களில் நான் கண்டறிந்தது ‘Trade Now’ல் Order Book, Trade Book, Ledger Balance அனைத்தும் ஜாவா pop-up விண்டோவில் வருகிறது. ஒருமுறை வந்த pop-up விண்டோவை மூடாமல் வைத்துக்கொண்டால் ஒரு லிங்கிலிருந்து அடுத்தது மாறும் போது விரைவாக கிடைக்கிறது. உதாரணத்துக்கு ஆர்டர் புக்கிலிருந்து ட்ரேட் புக் அல்லது டீமாட் பாலன்ஸ்.

ஐசிஐசிஐ டீமெட்டில் இருந்து எல்லா ஹோல்டிங்குகளையும் off market ட்ரான்ஸ்பர் மூலம் ரிலையன்ஸ் மணி டீமேட்டுக்கு மாற்றியுள்ளேன். ஐசிஐசிஐ ப்ரோகரேஜ் ரெகமண்டேஷன்ஸ் நன்றாக இருப்பதாக படுவதால் அதை மூடாமல் வைத்திருக்கலாம் எனவும் நினைத்திருக்கிறேன்.

எது எப்படியோ நமக்கு லாபம் வந்தால் சரிதான். பார்ப்போம்.

Posted in Labels: |

பங்குகளின் தரம் ஆய்தல் -Fundamendal Analysis

பங்குகளின் தரம் ஆய்தல் (Fundamendal Analysis) Glossary

இதுவரை பார்த்துவந்த புதியவர்களுக்காக பகுதிகளில் இருந்து பங்குகளின் தர அடிப்படையில் தேர்வு செய்வது எப்படி? கவனிக்க வேண்டியன என்னென்ன? மற்றும் இதன் தொடர்பான பயனுள்ள வலை முகவரிகள்.

நிறுவன பெயர் , முகவரி, என்ன பிசினஸ் இவை எதற்கு என்றால் Bull Market இருக்கும் போது நிறைய லெட்டர் பேட் கம்பெனிகள் பங்கும் பறக்கும் ஆனால் Bear Market வரும் போது கீழே விழுந்தால் மேலே போகவே போகாது.

ஐ.டி, தொழில் நுட்பத்துறை எனில் யார் யார் க்ளையண்ட் அதன் வருங்கால பிசினஸ் எப்படி இருக்கும் என்பவை.

பங்கின் முக மதிப்பு (face value), மார்க்கெட் கேப்பிடலைசேஷன்.

வருடத்தின் அதிக பட்ச விலை மற்றும் குறைந்த பட்ச விலை. Investment Prespective ல் சந்தையை அனுகுபவர்கள் வருடத்தின் அதிக பட்ச விலை இருக்கும்போது வாங்கக்கூடாது. சந்தை விழும் சமயத்தில்தான் வாங்கவேண்டும் அது எவ்வளவு நல்ல நிறுவனமாக இருந்தாலும்.

கடந்த வருடங்களில் நிறுவனம் பங்கு முதலீட்டாளர்களுக்கு கொடுத்து வந்த டிவிடண்ட், போனஸ்.

அதே துறையில் உள்ள போட்டி நிறுவனத்துடன் லாப விகிதங்கள் ஒப்பீடு.

PE Ratio, EPS இதில் முக்கியமானது ஒத்த நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது PE குறைவாக இருக்க வேண்டும் EPS அதிகமாக இருக்க வேண்டும்.

இவையெல்லாம் பத்திரிகைகளிலும் வலைத்தளங்களிலும் எளிதாக கிடைக்கும் தகவல்கள்.

பயனுள்ள வலைகள்
www.nseindia.com
www.bseindia.com
www.moneycontrol.com
http://www.rediff.com/money/index.html
http://content.icicidirect.com/research/research.asp
http://www.investopedia.com/university/fundamentalanalysis/

Posted in Labels: |

புதியவர்களுக்காக - 7

PE Ratio & EPS (Price Earning Ratio & Earnings Per Share)

உதாரணத்துக்கு ABC என்ற ஒரு நிறுவனத்தின் பங்கை எடுத்துக்கொள்வோம்.

அதன் மார்க்கெட் விலை ரூ.100
வெளியிட்டுள்ள
மொத்த பங்குகள் 100000
என கொண்டால்

மார்க்கெட்
கேபிடலைசேஷன் = 100000 X 100 = 100 லட்சம்

அந்நிறுவனம் வருடத்திற்கு 10 லட்சம் லாபம் ஈட்டுகிறது என கொள்வோம்

EPS = 10 லட்சம் (லாபம்)/ 1 லட்சம் (மொத்த பங்குகள்)
= 10ரூ ஷேருக்கு

PE Ratio = பங்கின் விலை / EPS

= 100/10

= 10

ABC நிறுவனத்தின் PE Ratio 10


SENSEX / NIFTY ன் PE Ratio

ஒரு இன்டெக்ஸ்ஸின் PE கண்டுபிடிக்க அந்த இன்டெக்ஸிலுள்ள ஒவ்வொரு நிறுவன PE கண்டுபிடித்து அந்த நிறுவனத்தின் இன்டெக்ஸின் வெயிட்டேஜ் அளவைப் பொறுத்து எல்லாவற்றையும் சேர்க்கும் மதிப்பு ஆகும்.

ஒரு பங்கின் தரத்தை நிர்ணயிக்க EPS என்பது மிக அடிப்படியான அவசியமான அளவுகோலாகும்.

புதியவர்களுக்காக - 6

புதியவர்களுக்காக - 6

பங்கிலிருந்து வருமானம்

சமசீர் பங்கு (Equity)

ஈக்விடி ஒரு நிறுவனத்தில் நமது வரையறுக்கப்பட்ட உரிமையினை குறிக்கிறது. எவ்வளவு அதிகமான ஈக்விடி ஷேர் உள்ளதோ அந்த அளவு அதிக உரிமை. ஒரு நிறுவனத்தின் பங்கு வைத்திருப்பது என்பது ஷேர் வைத்திருக்கும் பல்லாயிர கணக்கானவர்களில் நீங்களும் ஒருவர். வைத்திருக்கும் பங்கின் அளவை பொருத்து நிறுவன எல்லா சொத்துக்களிலும் நீங்களும் ஒரு உரிமையாளர் (this means technically, you own a portion of every piece of furniture, trademark, contract, etc of the company).

உரிமையாளர் என்ற முறையில் நிறுவன வருமானம், ‘வோட்’டிங் உரிமை (Voting rights) போன்றவை உங்களுக்கு உண்டு. இன்னொரு முக்கியமானது நிறுவனம் சரியாக இயங்காமல் கடன் போன்றவை ஏற்பட்டால் ஈக்விடி ஷேர் ஹோல்டர்கள் அதற்கு பொறுப்பாளர்கள் அல்ல. அதிக பட்சமாக அந்த பங்கு விலை குறைந்து நாம் போட்ட முதலீடு நஷ்டமடையும்.

பங்கிலிருந்து வருமானம்

1. முதலீடு பெருகுதல் (Capital Appreciation)

பொதுவாக இந்த பங்குகள் NSE / BSE ல் லிஸ்ட் செய்யப்பட்டு வர்த்தகம் நடைபெறும் அப்போது பங்குகளின் விலை நிறுவன செயல்பாடுகள், லாப/நஷ்டம், புதிய ஒப்பந்தங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் ஏறி இறங்கும் வாங்கிய விலையை விட அதிகமாக இருக்கும் போது விற்பது இது முதலீடு பெருகுதல் (Capital Appreciation) எனப்படுகிறது.

2. போனஸ் ஷேர்கள் (Bonus Shares)

நிறுவனம் நன்றாக செயல்பட்டு லாபம் ஈட்டும் போது போனஸ் ஷேர்கள் அறிவிக்கப்படலாம். எல்லா நிறுவனங்களும் இது போல அறிவிப்பதில்லை அதனால் பங்குகளை தேர்ந்தெடுக்கும்போது அதன் கடந்த வருடங்களின் செயல்பாடுகளை கவனிக்க வேண்டியது மிக முக்கியம்.

3.ரைட்ஸ் (Rights Issue)

ரைட்ஸ் ஷேர்கள் இது நிறுவனங்கள் பின்பற்றும் இன்னொரு முறை. அதாவது நிறுவனம் புதியதாக வெளியிடும் பங்குகளை ஏற்கனவே அந்நிறுவன பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு குறைந்த விலைக்கு கொடுக்கும். இந்த ஷேர்களையும் நிறுவனத்திடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி வெளி மார்க்கெட்டில் மார்க்கெட் விலைக்கு விற்க்கலாம்.

4. டிவிடெண்ட் (Divident)

நிறுவனம் ஈட்டிய லாபத்தை அதன் பங்கு வைத்திருப்பவர்களுக்கு டிவிடெண்ட்டாக கொடுக்கலாம். இங்கும் கவனிக்க வேண்டியது கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை எல்லா நிறுவனங்களும் கொடுப்பதும் இல்லை. பங்குகளை வாங்கும்போதே இதை எல்லாம் கவனித்து வாங்க வேண்டும்.

பங்கு தேர்ந்தெடுக்கும் முறைகள் (Strategies)

1. பங்கின் விலை அடிப்படையில் வாங்குவது

அடிப்படையில் நல்ல ஒரு நிறுவனத்தின் (fundamentally strong company) பங்கு விலை குறைவாக இருக்கும் போது வாங்குவது. உதாரணத்திற்க்கு இப்போது IT பங்குகள்.

2. டிவிடெண்ட் தரும் பங்குகள்

தொடர்ந்து டிவிடெண்ட் கொடுக்கும் பங்குகளை வாங்குவது. நிறுவனம் நன்கு செயல்பட்டு லாபம் ஈட்டினால்தான் டிவிடெண்ட் தொடர்ந்து கொடுக்க முடியும் எனவே கடந்த வருடங்களில் டிவிடெண்ட் தொடர்ந்து கொடுத்து வந்த நிறுவன பங்குகளை கவனித்து விலை குறையும் போது வாங்கலாம்.

3.டைவர்சிபிகேசன் (Diversification)

மொத்த முதலீட்டையும் ஒரே நிறுவன பங்குகளை வாங்கக்கூடாது (Diversification). அதற்க்காக Diversification செய்கிறன் என 20 – 30 நிறுவன பங்குகளையும் வாங்க கூடாது (over diversification) அதை follow செய்வது கடினம்.

பங்கு வர்த்தகத்தில் அபாயங்கள் (Risks)

முதலாவது வட்டி விகிதங்கள் அதிகரித்தல், Inflation, ஆட்சி மாற்றங்கள், போர் அபாயங்கள் போன்றவை.

இரண்டாவது நிறுவனத்தின் துறை சார்ந்த காரணிகள் (Industry Risk), ஸ்ட்ரைக், உற்பத்தியை பெருக்கும் புதிய தொழில் நுட்பங்களை நிறுவனம் அமல்படுத்தாமல் இருப்பது இதனால் அதே துறையில் உள்ள வேறு நிறுவனங்களின் உற்பத்தி அதிகரித்து நாம் முதலீடு செய்துள்ள நிறுவன லாபம் குறைவது போன்றவை. முதலீடு செய்துள்ள நிறுவன செயல்பாடுகளை கவனிக்காமல் இருப்பதும் ஒரு risk அதனால் அந்நிறுவன செயல்பாடுகள் பற்றி தொடர்ந்து கவனித்து வரவேண்டும்.

Happy Investing.

புதியவர்களுக்காக - 5

புதியவர்களுக்காக - 5



பவர் ஆப் அக்குமுலேசன் (Power of accumulation)

இது ரொம்ப நாள் முன்பு இணையத்தில் படித்த ஆங்கில கட்டுரையின் தமிழாக்க முயற்சி.

ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தான் அவனை புகழ்ந்து பாடிய புலவனிடம் பரிசில் என்ன வேண்டுமோ கேள் என அரசன் அகங்காரத்துடன் சொன்னான். அதற்கு அந்த புலவர் அரசனின் அகம்பாவத்தை அழிக்கவேண்டும் என எண்ணி அரசே எனக்கு பெரிதாக எதுவும் வேண்டாம் சதுரங்க பலகை இருக்கிறதல்லவா அதில் 1ம் கட்டத்தில் ஒரு நெல்மணி தாருங்கள் 2ம் கட்டத்தில் 2, 3ம் கட்டத்தில் 2ம் கட்டத்தில் எவ்வளவு இருக்கிறதோ அதை அதே எண்ணால் பெருக்கினால் எவ்வளவு வருகிறதோ அத்தனை நெல்மணி தாருங்கள், 4வது கட்டத்தில் 3ம் கட்டத்தில் எத்தனை உள்ளதோ அதே எண்ணால் பெருக்க கிடக்கும் எண்ணிக்கை இது போன்று அந்த 64 கட்டத்தில் எவ்வளவு பிடிக்கிறதோ அது போதும் என சொன்னார்.

பொன்னோ பொருளோ கேட்பார் என எண்ணியிருந்த அரசனும் புலவனை எள்ளி நகையாடி சரி என சொல்லிவிட்டான் சதுரங்க பலகையும் வந்தது.

1வது கட்டம் = 1 நெல்மணி

2வது கட்டம் = 2 நெல்மணி

3வது கட்டம் = 4 நெல்மணி

4வது கட்டம் = 16 நெல்மணி

5வது கட்டம் = 256 நெல்மணி

6வது கட்டம் = 65636 நெல்மணி

7வது கட்டம் = 4294967296 நெல்மணி

8வது கட்டம் = 18446744073709551616 நெல்மணி

9வது கட்டம் = 18446744073709551616 X 18446744073709551616 நெல்மணி

சொன்ன வாக்கை காப்பாற்றவில்லை என்றால் என்ன அரசன் இந்த 9 கட்டத்திற்குள்ளாகவே அவன் நாட்டில் இருந்த அனைத்து நெல் மணிகளும் காலியாகிவிட்டது.

அரசன் புலவரின் புத்தி சாதுரியத்தை மெச்சி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான் என போகும் அந்த கதை.

சரி இந்த கதைக்கும் முதலீடு / பங்கு வர்த்தகம் பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்றால் நம் முதலீடும் அப்படித்தான் எவ்வளவுக்கு எவ்வளவு சிறு வயதில் ஆரம்பிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு பல்கி பெருகும் (வட்டி குட்டி போடும், அந்த குட்டியும் குட்டி போடும் அப்படி).

சரி இந்த கட்டுரை படித்த உங்களுக்கு சின்ன home work

9வது கட்டம் = ??
10வது கட்டம் = ??
..
..
64வது கட்டம் = ??

சும்மா கணக்கு போட்டு பாருங்க

டிஸ்கி : சேமிப்பை சிறு வயதிலிருந்தே துவக்குங்கள்

Posted in Labels: |

இன்சூரன்ஸ் -2

இன்சூரன்ஸ் முதல் பகுதி படிக்காதவங்க இங்க க்ளிக் பண்ணுங்க.

யூலிப் எனப்படும் யூனிட் லிங்க்ட் இன்சூரன்ஸ் ப்ளான் பற்றி தெரிந்துகொள்ள தென்றலின் பதிவுக்கு இங்க க்ளிக் பண்ணுங்க. யூலிப் பற்றிய இந்த பதிவுக்கு திரு. ஏவிஎஸ் அவர்களின் பின்னூட்டமும், நான் எழுதிய பின்னூட்டமும் மீள் பதிவு செய்யப்படுகிறது. (ஒரு பேக்கப் தானுங்க)



ஏவிஎஸ்
said...
ULIP திட்டத்தின் சாதக பாதகங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

நான் மூன்றாண்டுகளுக்கு முன் பஜாஜ் அலயன்சின் ULIP திட்டத்தில் சேர்ந்தேன். இந்த ஆண்டு என் மூன்றாண்டு முதலீடுகளும் எவ்வளவு பணம் ஈட்டியிருக்கிறது என்று பார்க்கும் போது ஆண்டுக்கு 8 சதவிகிதத்தை தாண்டவில்லை. இத்தனைக்கும் நான் எனது ULIP முதலீட்டில் 80% பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்திருந்தேன்.

இந்த மூன்றாண்டும் பங்குச் சந்தை அபாரமாக வளர்ந்தும் எனது ULIP முதலீடு பெருகாததற்கு காரணங்கள்

1. முதலாண்டில் எனது முதலீட்டில் 70 சதவிகிதம் முகவர் கமிஷனுக்கும் (30%), பஜாஜ் அலயன்ஸ் நிர்வாகச் செலவுகளுக்கும் போய் விட்டது

2. ஒவ்வொரு மாதமும் எனது ஆயுள் காப்பிற்கான தொகை முதலீட்டிலிருந்து கழிக்கப்பட்டு விடுகிறது. அதாவது உங்களுக்கு ULIP ஆயுள் காப்பீடு 1 லட்சம் என்றால், அதற்கான மாதக் கட்டணம் மாதம் ரூ 200 இருக்கலாம். அதை நீங்கள் செலுத்தும் தொகையிலிருந்து கழித்து விட்டு மீதிப் பணம்தான் முதலீடு செய்யப்படுகிறது.

3. ULIP முதலீட்டிற்குள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு திட்டத்திற்கும் 5% வருடாந்திர சேவைக் கட்டணம் வசூலிருக்கிறார்கள். இது தவிர, முதல் மூன்றாண்டுகளில் பஜாஜ் அலயன்ஸ் சேவைக் கட்டணமாக 3% வருடா வருடம் வசூலித்து விடுகிறது. பரஸ்பர நிதிகள் இந்த மாதிரி வசூலிப்பது 2% சதவிகிதத்தை தாண்டினாலே அது அதிகம் என்கிறார்கள். முதலீட்டில் ஆண்டொன்றுக்கு 5-8% இப்படி வீணாவது முறையன்று. அதிலும் முதலீடுகள் நஷ்டமடையும் ஆண்டுகளில், இந்த கட்டணங்கள் முதலுக்கே பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தும். நீங்கள் ஒரு ஆண்டு முதலீடே செய்யாவிட்டாலும் ஏற்கனவே உங்களது கணக்கில் இருக்கும் முதலில் இருந்து இந்தக் கட்டணங்களுக்கான பணத்தை எடுத்துக் கொள்வார்கள்.

4. ULIP திட்டத்தில் வரிச் சலுகை இருப்பது உண்மைதான். ஆனால், அந்த வரி சலுகை உங்களுக்கு வருமானம் 5 லட்சத்திற்கு கீழே இருந்தாலும், நீங்கள் ஆயுள் காப்பீட்டிற்காக செலுத்தும் தொகை 1 லட்சத்திற்கு கீழே இருந்தாலும் மட்டுமே

எனது பஜாஜ் அலயன்ஸ் ULIP அனுபவத்தை வைத்துப் பார்த்தால், ULIP-ஐ விட பரஸ்பர நிதித் திட்டங்களில் மாதாமாதம் முதலீடு செய்வதுதான் சாலச் சிறந்தது. கடந்த மூன்றாண்டுகளில் எனது பரஸ்பர நிதி முதலீடுகள், ஆண்டொன்றுக்கு 20 முதல் 70 சதவிகிதம் பணம் ஈட்டியிருக்கின்றன. அவற்றை நான் என் விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும் விற்கலாம்.

சந்தையின் போக்குகளையும், எனது நிதி நிலைமையையும் வைத்து கூடுதலாகவோ, குறைவாகவோ முதலீடு செய்யலாம். இந்த வசதிகள் ULIP-ல் கிடையாது.




மங்களூர் சிவா
said...

என்னை பொருத்தவரை ULIP என்பது ஓர் ஃப்ராட் திட்டம்.

மக்கள் இன்சூரன்ஸ் காப்பீடு என்றால் என்ன. ஏன் வேண்டும். நமக்கு எவ்வளவு தேவை மற்றும் இன்வஸ்ட்மெண்ட் இரண்டையும் தனி தனியாக பிரித்து பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும்

எல்.ஐ.சி யின் அன்மோல் ஜீவன் தவிர எந்த ஒரு திட்டமும் ப்யூர் இன்சூரன்ஸே கிடயாது.இதில் 5 லட்ச ரூபாய் காப்பீட்டுக்கு 30 வயது உடயவருக்கு வருடத்திற்கு ப்ரீமியம் சுமார் 1750 ரூபாய்தான்.

இதே அளவு காப்பீடுக்கு வேறு திட்டங்களில் மணி பேக் ஆகட்டும், யூலிப் ஆகட்டும் குறைந்த பட்சம் 20,000 முதல் 25,000 ரூபாய் கட்ட வேண்டும்

5 லட்சத்திற்கு ஒரு அன்மோல் ஜீவனும் ப்ரீமியம் ரூ 1750 மீதி 17,250 ஐ பங்கு சந்தையில் நேரடியாகவோ அல்லது ம்யூசுவல் ஃபண்ட் திட்டங்களிலோ போட்டுவந்தால் முதலீட்டின் மேல் வருடததிற்கு 20 முதல் 25 சதவிகிதம் வருமானம் எதிர் பார்க்க முடியும்.


Note : Concept of Insurance, Functioning of Insurance எல்லாம் படித்ததால், மற்றும் அத்துறையில் இருக்கும் சிலர் தொடர்பு இருந்ததாலும், இன்சுரன்ஸ் மற்றும் இன்வ்ஸ்மெண்ட் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்ற ஆதங்கத்தாலும் Fraud என்று சொல்லியிருப்பேன்

Fraud என்பது தகாத வார்த்தையாக இருந்திருக்கலாம் ஆனால் எனக்கு இன்னும் சரியான வார்த்தை கிடைக்கவில்லை.

வரலாற்றை திரும்பி பார்ப்போம் - 2

இது ஜூன் 4 , 2006 ல் வெளியான பதிவு முத்து தமிழினி என்பவர் எழுதியது.

சில நாட்களுக்கு முன் இந்திய பங்கு சந்தைகளில் வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட்டது. நிதி அமைச்சர் சிதம்பரம் தலையிட்டு கவலைப்பட ஒன்றுமில்லை என்று அறிக்கை விட்டார்.ஒவ்வொரு முறை பங்கு சந்தை விழும்போதும் சிதம்பரம் இவ்வாறு அறிக்கை விடுவது வாடிக்கையாகிவிட்டது.ஒரு நிதி அமைச்சர் இவ்வாறு தலையிட்டு கருத்து கூறுவது சரியா என்பது ஒரு புறமிருக்க கம்யூனிஸ்டு தலைவர்கள் விடும் அறிக்கைகளால்தான் பங்கு வர்த்தகம் சரிவை சந்திப்பதாக ஒரு சாரார் கூறிவருகின்றனர்.

வெளியிலிருந்து பார்க்கும் கோயிஞ்சாமியாக எனக்கு தோன்றும் சில சந்தேகங்களை வைப்பதுதான் என் நோக்கம். பங்கு குறியீட்டு எண் வரலாறு காணாத அளவு ஏறிக்கொண்டே சென்றபோது பத்தாயிரம் எல்லாம் கம்மி என்றும் பதினாறாயிரம் வரை இந்த வருடமே ஏறும் என்றெல்லாம் பல வல்லுனர்களும் கருத்துக்கூறி வந்தனர்.இந்திய பொருளாதாரம் அந்த அளவு வலிமை வாய்ந்தது என்றெல்லாம் பல ஆதாரங்களை அள்ளிவிட்டு இவர்கள் கருத்துக்கூறி வந்தனர்.

கடந்த சில வாரங்களாக பங்குகள் சரிய ஆரம்பித்தவுடன் இவர்கள் கூறுவது என்னவெனில் மும்பை சென்செக்சின் உண்மையாக மதிப்பு 7800 - 8000 புள்ளிகள்தான் என்றும் இப்போது இருக்கும் 10000+ புள்ளிகள் நிலையே அதிகம் என்கிறார்கள். அரசியல் வாதிகள் கணக்காக பொருளாதார மேதைகளும் உளறிகொட்டுவதை பார்க்க மிக காமெடியாக உள்ளது.பங்கு மார்க்கெட் ஐந்தாயிரம் புள்ளிகளை தாண்டுமபோதே ரீடெய்ல் இன்வஸ்டர்ஸ் என்று அழைக்கப்படும் நம்மை போன்ற கோவிஞ்சாமிகளில் பலர் பங்குகளை விற்றுவிட்டார்கள்.பிறகு மார்க்கெட் நன்றாக ஏறியபின் உள்ளே நுழைந்த கோவிஞ்சாமிகள் பலர் கையை சுட்டுகொள்வது எதிர்ப்பார்க்கக்கூடியதே.

இப்போது கோயிஞ் சாமிகளான நாம் எந்த நிலையை எடுப்பது? சிதம்பரம் சொல்கிறார் என்று பங்குகள் வாங்குவதா ?நாக்கில் நரம்பில்லாமல் பேசும் இந்த பொருளாதார மேதைகளை நம்பி இவர்கள் அழும்போது அழுவதும் இவர்கள் சிரிக்கும்போது சிரிப்பதும் நமக்கு தேவையா?இன்னொரு புறம் வெளிநாட்டு பணம் ஏகப்பட்டது இந்தியாவில் வந்து குவிந்து இதனால் செயற்கையாக ஏற்றப்பட்டதுதான் பங்கு வர்த்தகம் என்ற கருத்தும் நிலவுகிறது.அதுவும் உண்மை என்றுதான் தோன்றுகிறது.

கடந்த சில வாரங்களில் மிகப்பெரிய தொகையை இந்த வெளிநாட்டு வியாபாரிகள் வெளியே எடுத்துள்ளார்கள். இதற்கே பங்கு மார்க்கெட் ரணகளமாகி உள்ளது. இந்த அழகில் பென்சன் நிதியை பங்கு மார்கெட்டில் முதலீடு செய்ய{இப்போதைக்கு ஐந்து சதவீதத்தை மட்டும்} அரசாங்கம் நினைப்பதாகவும் அதற்கு கம்யூனிஸ்டுகளும் தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அரசாங்கம் அலுத்துக்கொள்கிறது.

வழக்கம் போல் ஆங்கில மீடியாக்கள் ரொம்ப ஃபீல் செய்கின்றன.(இந்தியாவில் உள்ள ஆங்கில மீடியாக்களை போல் அயோக்கியர்கள் யாரும் இல்லை என்பது என் சொந்த கருத்து}.வயதான காலத்தில் நிம்மதியாக வாழ்வது என் ஒரே அடி்ப்படையில்தான் பென்சன் முதலான சலுகைகளை நம்பி சம்பளம் குறைவு என்றாலும் அரசாங்க வேலையில் சேர்கிறார்கள். இந்த பென்சன் பணத்தையும் பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்து யாரோ சாப்பிட்டுவிட்டு சென்றால் அது யாருக்கு லாபம்? எத்தனையோ அரசாங்க பாண்டுகள், செக்யூரிட்டுக்கள் ஆகியவை பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்புகளை அளிக்கின்றன.

இதனால்தான் கம்யூனிஸ்டுகள் இதை எதிர்க்கிறார்கள்.அவர்கள் இருப்பும் நாட்டிற்கு அவசியம்தான் என்று தோன்றுகிறது.இந்த அழகில் கேபிடல் அக்கவுண்ட் கன்பர்டபிளிட்டி என்று நமது ரூபாயை எங்கு வேண்டுமானாலும் மாற்றக்கூடிய அளவில் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சிதம்பரம் அண்ட் கம்பெனி மன்னாரு அண்ட் கம்பெனி கணக்காக அறிக்கை கொடுக்கிறது.

நல்லவேளை இதை ஏற்கனவே பல பொருளாதார நிபுணர்கள் எதிர்த்து உள்ளனர். பணவீக்கவிகிதம் என்று கூறி அரசாங்கம் வாரவாரம் ஒரு அறிக்கை வெளியிடுகிறது.இதன் அடிப்படையில் பல பொருளாதார முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அந்த மதிப்பீட்டையே குறைகூறியும் அரசாங்கம் அதில் தகிடுதத்தம் செய்கிறது என்று கூறியும் ஒரு கட்டுரையை நான் படித்தேன்.என்ன நடக்கிறது இந்த நாட்டில்?கோவிஞ்சாமிகளை காப்பாற்றுவது யார்?

இந்த பதிவிற்க்கு திரு. செல்லமுத்து குப்புசாமி எழுதிய பின்னூட்டம்

நிதியமைச்சர் ஒருவர் தினசரி பங்கு விலைகளைக் கண்காணித்து அறிக்கை விடுவது பேரவலம். அவருக்கு இதனை விட முக்கியப் பொறுப்புகள் இருக்குமெனக் கருதுகிறேன்.

விலை உயரும் போது மார்தட்டும் சந்தைகள் (BSE & NSE), செபி, அரசு, அந்தந்த நிறுவனங்கள் எல்லாம், விலை சரியும் போது வேறு காரணங்களைத் தேடுகின்றனர். அதுவும் ஒரு அவலம். கிரிக்கெட் மேட்ச் ஜெயிக்கும் போது ஆட்டக்காரர்கள் செய்யும் தவறுகள் அனைத்தும் மறக்கப் படுகின்றன. அதே சமயத்தில் அணி தோல்வியைச் சுவைக்கும் போது, சிறப்பான ஆட்டம் கூட விமர்சிக்கப் படுகிறது.

அதே போலத் தான் பங்குவிலையும்.. ஏறும் போது இறங்கும் போதும் அதற்குக் காரணம் கற்பிப்பதற்காத்தான் மிகப் பெரிய கூட்டம் கழுத்தில் 'டை'யைக் கட்டிக் கொண்டு சி.என்.பி.சி.யில் இரைச்சலைக் கிளப்புகிறது.

பிறரது ஆலோசனையின் பேரிலோ அல்லது சுய முடிவின் அடிப்படையிலோ நாம் முதலீடுகளைச் செய்து விட்டு அரசாங்கம் விலையச் சரியாமல் பாதுகாக்க வேண்டும் என எதிர்பார்ப்பது அறிவீனம் மட்டுமில்லாது பேராசையும் கூட.

Warren buffett once said, "Stock market is somewhat like a god. He rewards when you do good things. But, unlike real god he does not forgive on mistakes; rather punishes hard".

முத்து, நீங்கள் திறந்த வெளிச் சந்தை அமைப்பை ஒட்டுமொத்தமாக எதிர்ப்பதாகவும், பொதுவுடமைத் தனத்தை மாற்றமின்றி ஏற்பதாகவும் அறிகிறேன். அது குறித்து விவாதிக்க இங்கே இடம் போதாது. தனியாக வைத்துக் கொள்ளலாம்.

கேபிடல் அக்கவுண்ட் கன்பர்டபிளிட்டி' குறித்தான் உங்களது பார்வை என்னை மகிழச்செய்கிறது. தமிழ்மணத்தில் இது போன்ற விடயங்களை விவாதிக்க எவருமில்லை என எண்ணியிருந்தேன்.

Fundamental analysis & technical analysis என எத்தனை இருந்தாலும் maas psycology தான் சந்தையை இயக்குகிறது. 2005 மே மாதம் முதல் 2006 மே வரை சென்செக்ஸ் நிறுவனங்களின் செயல்பாடு சுமார் 25% (அதிகபட்சமாக) உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் குறியீடு 6,000 இல் இருந்து 12,000 ஐத் தொட்டது.

இதையெல்லாம் பார்க்காமல் சூதாடி விரலைச் சுட்ட பின் பிறரைக் குறை சொல்வது ஆரோக்கியமானதல்ல. குறியீடு உச்சத்தில் இருக்கும் போது இந்தியப் பங்குகளில் பணம் போட்ட (விரலைச் சுட்ட) அந்நிய முதலீட்டு நிறுவனங்களும் இல்லாமலில்லை. ஆனால் அவர்களது மொத்த நிதியில் அது சிறிய விழுக்காடாகவே இருந்திருக்கும். இன்னும் நிறையப் பேசலாம்.. இப்போதைக்கு இது போதும்..

இன்று மட்டுமின்றி என்றுமே, பணவீக்கத்தை விட, வங்கிகள் தரும் வட்டியை விட நீண்ட கால அடிப்படையில் பங்கு முதலீட்டில் (not trading & speculation) அதிகமான வளர்ச்சியை ஈட்ட முடியும் என நம்புகிறேன். அதற்காக நிரம்ப உழைக்க வேண்டியிருக்கும்.

-குப்புசாமி செல்லமுத்து

Posted in Labels: |

வரலாற்றை திரும்பிப் பார்ப்போம்

இந்திய பங்கு சந்தையில் கடந்த வருடங்களில் நடந்த நடைபெற்ற பழைய வரலாற்றை திரும்பிப் பார்ப்போம்.

கீழே உள்ள வலையில் இருக்கும் அனைத்து பதிவுகளும் படிக்க வேண்டியவை எனவே லிங்க் மட்டும் கொடுத்துள்ளேன்.

http://sadhayam2.blogspot.com/

Posted in Labels: |

MARKET CRASH HOW TO HANDLE

வாரத்தில 2 நாட்கள் நைட் ஷிப்ட் அதாவது ராத்திரி 8.00மணிக்கு போனா அதிகாலை2.00 - 2.30க்கு வீட்டுக்கு வந்திடலாம். சாதாரனமாக நைட் ஷிப்ட் இல்லாத நாட்களில் காலை 7 மணிக்கு வாக்கிங் போவதை வழக்கமாக கொண்டுள்ள உள்ள எனக்கு நேற்று நைட் ஷிப்ட் இல்லாத போதும் இன்று அலாரம் அடிக்கும் போது எழ முடியவில்லை சரி ஈவ்னிங் வாக் போலாம் என நினைத்து தூங்கி எழும்போது காலை 9.00 மணி.( இது எதாவது instinctஆ என தெரியவில்லை)

டிபன் சாப்பிட்டு மெதுவாக ICICIDIRECT ஆன்லைன் ட்ரேடிங் போர்டல் ஓப்பன் செய்தால் போர்ட்போலியோ மதிப்பு தாறுமாறாக இருக்கு. ட்ரேடிங் குவான்டிடி அப்டேட் ஆகவில்லை. சரி இது எதோ ICICI போர்டல் ப்ராப்ளம் என நினைத்து மற்ற வணிகதளங்களை செக் செய்யும் போது தெரிந்தது சென்செக்ஸ் 1700 புள்ளிகள்ள் சரிவு 10% down side circuit filter triggered in NSE அதனால் பங்கு வர்த்தகம் 1 மணி நேரம் தடை செய்யப்பட்டுள்ளது.

11மணிக்கு திரும்ப வர்த்தகம் துவங்கியது ஆச்சரியமூட்டும் விதமாக 1400 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் 18715.82 (-336) புள்ளிகளில் முடிந்தது.

இதற்குமுன் இது போல 2006 மே மாதம் மார்க்கெட் க்ராஷ் ஏற்பட்டு பங்கு வர்த்தகம் 1 மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டது.சாதாரனமாக நான் Day Trade செய்வதில்லை. சில சமயம் என் holdingல் இருக்கும் பங்குகளில் செய்வேன். இல்லாத பங்குகளில் Margin trade செய்வதில்லை. ஒரு காலத்தில் அதை மட்டுமே செய்துகொண்டிருந்தேன். அவ்வளவு ரிஸ்க் மற்றும் நேரத்தை விரயம் செய்தும் பெரிதாக ஒன்றும் சாதிக்க முடியவில்லை. Day Trade தவறில்லை அது இல்லை என்றால் கையில் இருக்கும் பங்குகளை பணமாக மாற்ற முடியாது.

சரி மார்க்கெட் க்ராஷ்க்கும் Margin Tradingக்கும் உள்ள சம்பந்தம் என்ன என்றால் இது அணுப்பிளவு மாதிரிதான் எல்லா ஸ்டாப் லாஸ்களும் ஒரே நேரத்தில் trigger ஆகி (எரிகிற தீயில் பெட்ரோல் ஊற்றுவதை போல) ஏற்கனவே இறங்கிக்கொண்டிருக்கும் சந்தையை குப்புற தள்ளும்.

இதில் நஷ்டப்படுவவர்கள் இந்த Day traders தான். Quality Stockகளில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு சிறிது நஷ்டம் ஏற்பட்டாலும் விரைவில் அந்த பங்கின்விலை மேலே வந்துவிடும்.

சரி இப்போது என்ன செய்யவேண்டும் முதலாவது

1. Dont Panic.
2. Be patience
3. Cash is the only defensive weapon so sit in cash.
4. If you feel quality stock available at reasonable / cheap price buy in small quantity.
5. Investment is not a one time act. It is continous process.

Winners are not quitters.

All the best.

Posted in Labels: |

MARKET TIMINGS

FROM TODAY ONWARDS,
THE MARKET WILL STRAT AND CLOSE AS NORMAL -
I.E 9.55 AM TO 3.30 PM

10 October 2007

Posted in Labels: |