சந்தை நிலவரம் 19-05-09

சென்செக்ஸ் 20000 இருந்தபோது ஒருவரும் கீழே இறங்கும் என நம்பவில்லை 25,000 போகும் என்றுதான் நம்பினார்கள் சென்செக்ஸ் 8000க்கு விழுந்த போது மீளும் என ஒருவரும் நம்பவில்லை 6000 போகும் என்றே நம்பினார்கள் வாங்கிய விலையில் இருந்து 20 - 30% லாபம் இருந்தால் விற்று கண்டிப்பாக ஃப்ராபிட் புக் செய்ய வேண்டும்.

நேற்று காலை வர்த்தகம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே 10% சர்க்யூட் ட்ரிக்கராகி இரண்டு மணிநேரமும் பின்னர் 20% சர்க்யூட் ட்ரிக்கராததால் நாள் முழுவதும் வர்த்தகம் நிறுத்தப்பட்டது. சென்செக்ஸ் 2110 புள்ளிகளும் ( 17.3 சதவீதம் ), தேசிய பங்கு சந்தையில் நிப்டி 651 புள்ளிகளும் ( 15.05 சதவீதம் ) உயர்ந்திருந்தது.

நேற்று 20% சந்தை உயர்ந்திருந்தாலும் வாலயூம் அவ்வளவாக இல்லாததால் நேற்றைய உயர்வு உண்மையான உயர்வா என சந்தேகம் அனைவருக்கும் இருந்தது.

இன்று 19-5-09 காலை 11 மணிக்கு சென்செக்ஸ் நேற்றைய மதிப்பிலிருந்து 150 புள்ளிகள் அதிகரித்து 14425 என்ற நிலையிலும் நிஃப்டி 10 புள்ளிகள் அதிகரித்து 4332 என்ற நிலையிலும் வர்த்தகமாகி வருகிறது , இது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிற ஒன்றாகும்.

மக்கள் காங்கிரசஸ் கட்சிக்கு மிக பெரிய வெற்றியை - ( லல்லு, இடதுசாரிகள்,மாயாவதி,முலாயன் சிங் ஆதரவு தேவைப்படாத அளவுக்கு ) தந்துள்ளதால், முதலீட்டாளர்கள் மிகுந்த வரவேற்பை பங்கு மார்கெட்டில் காட்டியுள்ளனர்

பங்குசந்தை 8000 - 10000 புள்ளிகள் இருக்கும் போது நம்பிக்கையுடன் வாங்கியவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Posted in |