ரிலையன்ஸ் மணி இன்ஸ்ட்டா ட்ரேட் செட்டிங்ஸ்.

ரிலையன்ஸ் மணி இன்ஸ்ட்ரா ட்ரேட் செட்டிங்ஸ்.

You are kindly requested to perform the following steps to enable INSTA TRADE

1. Open www.reliancemoney.com

2. Click on Insta Trade

3. Login with User name, password and Security Key

4. Jump to --- Select Trading

5. Click Login

6. Click Help

7. Click Misc Links

8. Click JVM

9. Save on local disk

10. Click on jvm.zip

11. Click msjavax.zip to install

12. Reboot PC

13. Sun JVM must be disabled :
Go to Internet Browser--> Tools --> Internet Options -->Advanced -->Java(Sun).
(Change this setting only if aforesaid settings are found)

14. Enable Microsoft VM :
Go to Internet Browser --> Tools --> Internet Options --> Advanced --> Java Console enabled.

Go to Internet Browser --> Tools --> Internet Options --> Advanced --> Java Logging enabled.

Go to Internet Browser --> Tools --> Internet Options --> Advanced --> JIT complier for virtual machine enabled.

15. Save all changes and re-login.

Incase if you are still unable to login to INSTA TRADE then please send us an email to customer.support@reliancemoney.co.in.

Posted in Labels: |

அனுபவம் 5

குறிப்பு : சிலருடைய மோசமான அனுபவங்கள் எல்லாம் உதாரணங்கள் அல்ல.

அனுபவம் 1

அனுபவம் 2

அனுபவம் 3

அனுபவம் 4

நான் விற்ற பிறகு ஐடிபிஐ பங்கு ஜகஜோதியாய் மேலே சென்று 175 வரைக்கும் போனது இப்போது 170ரூபாய்க்கு வியாபாரமாகிறது.

பிறகு ஒரு நாள் நடந்ததை எல்லாம் நினைத்து என்ன என்ன தப்பு செய்தோம் என நானே கண்டுபிடித்து சில வரைமுறைகளை வகுத்து தீர்மானங்களை கொண்டுவந்தேன்.

அதில் முக்கியமான் ஒன்று UTI Securities நமக்கு ராசியில்ல அதை மொதல்ல மாத்தி வேற ப்ரோக்கரேஜ்க்கு போயிடனும். இது எப்படி இருக்கு ச்சும்மா அதிருதில்ல.

--
--

UTI Securities நமக்கு ராசியில்ல அதை மொதல்ல மாத்தி வேற ப்ரோக்கரேஜ்க்கு போயிடனும் இந்த முடிவெடுக்க காரணம் அவங்க தினமும் போன் செய்து இதை வாங்குங்க அதை வாங்குங்கன்னு டிப்ஸ் மேல டிப்ஸ் தொல்லை தாங்க முடியலை.

இன்னொரு சுமுஹுர்த்த சுபதினத்தில் ICICI Securities ல் ஆரம்பித்து கடந்த மாதம் வரை ஓடிக்கொண்டிருந்தது. ஐசிஐசிஐ-ல் என் ஒரே பிரச்சனை அவர்களிடம் ப்ரோக்கரேஜ் ஜாஸ்தி டெலிவரி ட்ரேட்க்கு 0.75 சதவிகிதம் சேல்ஸ் டாக்ஸ், செக்யூரிடி ட்ரான்ஸாக்ஷன் டாக்ஸ் எல்லாம் சேர்ந்து 1 சதவிகிதம் வந்துவிடும். அதாவது பத்தாயிரம் மதிப்புள்ள எதாவது ஒரு நிறுவன பங்கை வாங்கும் போது நூறு ரூபாய் விற்கும் போது நூறு ரூபாய். பத்தாயிரம் ரூபாய்க்கு பங்கு வாங்கி விற்கும் போது இருநூற்று ஐம்பது ரூபாய் லாபம் வந்தால் இறுநூறு ரூபாய் ப்ரோக்கரேஜ் என்ன கொடுமை இராதாகிருஷ்ணன் இது.

பிப்ரவரி 2007ல் இருந்து அக்டோபர் வரை ஆன ப்ரோக்கரேஜ் 20,000 ரூபாய்கள் ( ஜனவரி வரை ட்ரேட் செய்தது யூடிஐ செக்யூரிடீஸ்-ல்).

மிக சமீபமாக ரிலையன்ஸ் மணிக்கு மாறியிருக்கிறேன் 20 நாட்கள் ஆகிறது 2500 ரூபாய் முதலிலேயே கட்டிவிட்டால் 5.4 கோடி இன்ட்ரா டே + 60 லட்சம் டெலிவரி ட்ரேட் மொத்தமாக ஆறு கோடி ரூபாய்க்கு இலவசமாக செய்து கொள்ளலாம்.

விவரமான ப்ரோகரேஜ் இந்த லிங்கில் பார்க்கவும்.

சரி நான் முதல் முதலில் வாங்கிவிற்ற பங்கின் இன்றைய விலை எவ்வளவு தெரியுமா கர்னாடகா பாங்க் ரூ200 வருடத்தின் அதிக பட்ச விலை ரூ250,
ப்ரஜ் இண்டஸ்ட்ரீஸ் போனஸ் ஸ்ப்லிட் எல்லாம் கணக்கில் சேர்த்து இன்றைய மதிப்பு ரூ1000க்கும் மேல் டிவிடண்ட் கணக்கில் சேர்க்காமல்.

என்னத்த செய்ய அவ்வ்வ்வ்வ்வ்

சரி ரொம்ப ப்ளேடு போட்டுட்டேன்னு எனக்கே நல்லா தெரியுது. இதோட நிறுத்திக்கிறேன் இந்த தொடரை. வந்தவர்களுக்கும் வாழ்த்தியவர்களுக்கும் நன்றி வணக்கம்.

Posted in Labels: |

என் அனுபவங்கள் -4

குறிப்பு : சிலருடைய மோசமான அனுபவங்கள் எல்லாம் உதாரணங்கள் அல்ல.

அனுபவம் 1

அனுபவம் 2

அனுபவம் 3


ஒரு சுபமுஹூர்த்த சுபதினத்தில் என் ஆபீஸ்க்கு வந்த மார்க்கெட்டிங் ஆளிடம் மாட்டி UTI Securities ல் டீமேட் ஆரம்பித்தேன். அப்போதெல்லாம் என்னிடம் கம்ப்யூட்டர் இல்லை, போன் செய்து பங்கை வாங்க சொல்வது / விற்க சொல்வது அல்லது அவர்கள் அலுவலகத்திற்கு சென்று ட்ரேட் செய்வது (ஆஃப் லைன் ட்ரேடிங்). அதற்கு முன்னரே வாரன் பப்பட் எல்லாம் இணையம் மூலமாக ஓரளவு அறிமுகமாகியிருந்தார்கள்.

முதன்முதலாக ட்ரேட் செய்யபோகிறேன் எந்த பங்கை வாங்குவது என்பதில் ரொம்ப ரொம்ப குழப்பமாக இருந்தது. பெரும்பாலோருக்கு முதல் ட்ரேட் செய்யும் போது இந்த குழப்பம் இருக்கும் என நம்புகிறேன். அதனால் UTI Securities அலுவலகத்திற்கே போய்விட்டேன் எனக்கு முன்னால் ஒருவர் "கர்னாடகா பாங்க்" பங்கு வாங்க சொன்னார். நானும் போய் இனிப்பு கடையில் எனக்கும் ஒரு கிலோ அதே குடுத்திடுங்க ரேஞ்சுக்கு அதையே 100 வாங்கினேன். அப்போது அந்த பங்கின் விலை மிக சரியாக 107 ரூபாய்.

என் நல்ல நேரமோ என்னமோ தெரியலை 120ரூபாய்க்கு வெளியே வந்துவிட்டேன். அடுத்ததாக நான் வாங்கிய பங்கு "ப்ரஜ் இன்டஸ்ட்ரீஸ்" அதன் விலை 110 ரூ வெளியேறிய விலை 115 அதிலும் லாபம். ஸ்டாக் மார்க்கெட்டில் கோடி ரூபாய் சம்பாதித்தது போல இருந்தது.

நடந்தேன் என சொல்வதை விட மிதந்தேன் என்றுதான் சொல்லவேண்டும். வாரன் பப்பட் நீண்ட கால முதலீடு எல்லாம் மறந்தே போய்விட்டது. இப்போது நினைத்து பார்த்தால் எத்தகைய முட்டாள்தனத்தை செய்திருக்கிறேன் என தெளிவாக தெரிகிறது.

குருட்டான் போக்கில் செய்த இரண்டு 'ட்ரேட்' களும் வெற்றி. சரி எப்பதான் நான் சந்தையிடம் பாடம் கற்றுக்கொள்வது.

எனக்கு பாடம் புகுத்திய பங்கு ஐடிபிஐ. 2006 ஜனவரி என நினைக்கிறேன் அதை பரிந்துரைத்தது UTI Securities நான் வாங்கும்போது அதன் விலை 105 கொடுக்கப்பட்ட டார்கட் 115 ஸ்டாப்லாஸ் 100.

இந்த காலகட்டத்தில் நிறைய படித்தும் பலருடன் பேசியும் தெரிந்து கொண்டதில் ஸ்டாப்லாஸ் ஒவ்வொருவரின் ரிஸ்க் கெபாசிடியை பொறுத்து மாறும் நிறைய ரிஸ்க் எடுத்தால் நிறைய லாபம் கிடைக்கும்னெல்லாம் புரிஞ்சிகிட்டு அவங்க குடுத்த ஸ்டாப்லாஸை காத்தில விட்டாச்சு. விலையோ இறங்கிகிட்டே வருது.

CNBC TV18 ஒரே சானல் தான் பாக்கிறது. நான் பேச்சிலர் என்பதால் சேனல் மாத்தனும் கோலங்கள் பாக்கனும்னு தங்கமணி தொல்லை எல்லாம் இல்லை. சில நாட்கள் நைட் ஷிப்ட் முடிந்து இரவு 2.30க்கு வீட்டுக்கு போய் டிவியை ஆன் செய்து NASDAQ மார்க்கெட்டெல்லாம் பார்ப்பேன். அதாவது முத்திபோயிடிச்சுன்னு சொல்லுவாங்களே அது மாதிரிதான் இருந்தேன்.

IDBI விலை 100, 90, 80 , 70 ன்னு குறைஞ்சுகிட்டே வருது நானும் ஆவரேஜ் பன்னறேன்னு இருக்கிற காசுக்கெல்லாம் வாங்கி குமிச்சிகிட்டே இருக்கேன். இருக்கிற மத்த ஷேர் எல்லாம் கூட வித்து இதை வாங்கினேன் 70க்கு கீழயும் போச்சு ஆனா நான் ஆவரேஜ் பன்றதை நிறுத்திட்டேன் போர்ட்போலியோல இருக்கிறது இது ஒரு ஷேர் மட்டும்தான் ஏறக்குறைய 650 ஷேர் கைல இருந்து போட்ட முதல் 50,000 மார்க்கெட் விலையோ 30,000 சரி இது நமக்கு சரிபட்டு வராதுன்னே முடிவு கட்டி கொஞ்ச நாள் அந்த பக்கமே போகாம சும்மா சுத்திகிட்டிருந்தேன் ஒருவழியா 48ரூ வரைக்கும் போய் தரைய தட்டி மெல்ல மேல்ல 80 ரூபாய்க்கு வந்த உடனே மொத வேலையா எல்லா பங்கையும் வித்துட்டேன். நோ லாஸ் நோ ப்ராபிட் இதற்கு எடுத்துகொண்ட காலம் 10 மாதங்கள்.

(தொடரும்)

Posted in Labels: |

என் அனுபவங்கள் -3

குறிப்பு : சிலருடைய மோசமான அனுபவங்கள் எல்லாம் உதாரணங்கள் அல்ல.

அனுபவம் 1

அனுபவம் 2

மூன்றாவது வருடம் அதாவது 2004ல் உடன் வேலை செய்யும் நண்பர் ஒருவர் ம்யூச்சுவல் பண்ட் ELSS (Equity Linked Saving Scheme)ஐ ஆபீஸில் சப்மிட் செய்ததை பார்த்தேன். அது என்ன ஏது என்று அவரை கேட்க அதெல்லாம் எனக்கு ஒன்னும் தெரியாது என் சித்தப்பா இப்படி செய்ய சொன்னார் செஞ்சேன்னு முடிச்சிகிட்டார்.

அதன் பிறகு அதை பற்றி கூகுள் ஆண்டவரிடம் சொல்லி தேடு தேடு என தேடி பல விசயங்கள் படித்தேன் ஆனாலும் ஒரு பயம் கடைசி லைன்ல இருக்குமே Returns are subject to Market Risk , Past performance is not guarantee to the future performance அதையெல்லாம் பாத்துட்டு. ஆனால் மார்க்கெட்டில் என்ன நடக்கிறது என்பதை தினமும் கவனித்து படித்து வந்தேன்.

கொஞ்சம் பயம் தெளிந்து முதல்முதலில் நான் செய்த முதலீடு Fidelity Equity Fund (G)ல் 6,500ரூபாய்கள் NFOல். அப்போது மார்க்கெட் 8000 பாயிண்ட்டுகள் என நினைக்கிறேன் முதலீடு செய்த பணம் 8500 ஆன உடன் வெளியே வந்துவிட்டேன்.

பிறகு 'டாக்ஸ்' க்காக PRU ICICI TAX PLAN ல் ஒரு SIP ஆரம்பித்தேன். எதோ என் நல்ல புத்தி இன்றும் அதை தொடர்ந்து வருகிறேன். அதை ஆரம்பிக்கும்போது அது 5 ஸ்டார் ரேட்டிங்கில் இருந்தது இப்போது இல்லை வெறும் 3 ஸ்டார்தான் ஆனாலும் அது MID CAP FOCUSED FUND நீண்ட காலம் அதில் தொடர்ந்து முதலீடு செய்து வரும் போது நல்ல ரிடர்ன் இருக்கும் என உள்ளுக்குள் ஒரு பட்சி சொல்கிறது.

சந்தை சரிந்தது அப்பாடா நல்ல சமயத்தில் தான் Fidelity Equity Fundல் இருந்து வெளியேறியிருக்கிறேன் என ஒரு இருமாப்பும் வந்தது. சந்தை சரிவை பயன் படுத்தி Pru ICICI Emerging STAR 20,000 ரூபாய்க்கு வாங்கினேன் (இதுவும் மிட்கேப் ஃபோகஸ்ட் ஃபண்ட்) இரண்டு மாதத்திற்கும் குறைவான நேரத்தில் 22,000 ரூபாயாக வெளியேறினேன் சொல்லபோனால் என் முதல் ட்ரேட் இதுதான்.

இதன்பிறகு பலதரப்பட்ட பரீட்சாத்த முயற்சிகள் ஆனால் எல்லாம் ம்யூச்சுவல் பண்ட்டிலேயே நடத்தி வந்தேன். Moneycontrol.com ல் எதாவது புதுப்புது கட்டுரைகள் வந்து கொண்டே இருக்கும். அப்படி ஒரு நாள் வரவில்லை என்றால் கூட படித்த கட்டுரையை திரும்ப படிப்பேன் இல்லை என்றால் ராத்திரி தூக்கம் வராது :-)

Posted in Labels: |

என் அனுபவங்கள் -2

குறிப்பு : சிலருடைய மோசமான அனுபவங்கள் எல்லாம் உதாரணங்கள் அல்ல.

அனுபவம் 1

அந்த காலத்தில் அதாவது 1998 - 1999 களில் DTP சென்டருக்கு நல்ல மரியாதை இருந்தது, பிசினஸ் இருந்தது. மாதம் பத்திலிருந்து இருபதாயிரம் அதற்கு மேலும் வருவாய் இருந்தது அந்த காலத்தில் இது மிகப்பெரிய தொகை. சாப்ட்வேர் கம்பெனிகள் எல்லாம் இந்த அளவு சென்னையைகூட எட்டி பார்க்காத நேரம். டிகிரி படித்தவர்களே இரண்டாயிரம் மூவாயிரம் சம்பளத்திற்கு வர தயாராக இருந்தார்கள்.

சொந்த ஊரில் அவன் பிசினஸ் செய்து வந்ததால் வீட்டு வாடகை இல்லை சாப்பாட்டு செலவு இல்லை என பல advantage. நான் சென்னையில் வாடகை, சாப்பாட்டு செலவு போக்குவரத்து செலவு என சம்பளத்தில் முக்கால்வாசி பணத்தை செலவு செய்துகொண்டிருந்தேன்.

அவனுடைய அபார திறமையான நிர்வாகத்தால் ஒரே வருடத்தில் இரண்டு மூன்று லட்ச ரூபாய் கடன்காரனாகி கடையை அம்போவென விட்டுவிட்டு ஊரை விட்டு எங்கோ போய்விட்டான்.

எவ்வளவுதான் நெருங்கிய நண்பனாக இருந்தாலும் கடன் கொடுக்ககூடாது என பாடம் கற்றுக்கொண்டேன். அதற்கு நான் கொடுத்த விலை ரூ 15,000 ஏறக்குறைய ஒரு வருட சேமிப்பு அது. நல்ல வேளையாக அவனுக்கு ஜாமீன் எதுவும் நான் போடவில்லை.

அதன்பிறகு சேமிப்பு என நான் செய்தது போஸ்ட் ஆபீஸில் மாதம் 1000 ரூபாய்க்கான RD ஐந்து வருடத்திற்கு அப்போது அதற்கு 9.5 சதவீதம் வட்டி கிடைத்தது. அப்போதெல்லாம் இந்த பங்கு சந்தை, ம்யூச்சுவல் பண்ட் எல்லாம் எனக்கு என்று இல்லை என் ஊரில் 99% ஆட்களுக்கு எதுவும் தெரியாது. அந்த மீதி 1% ஆட்களும் என் ஊரில் இல்லை :-))

இப்படி போய்கொண்டிருக்கும்போது வேலை மாற்றலாகி 2002ல் மங்களூருக்கு வந்தாச்சு. இப்பதான் இன்கம் டாக்ஸ் கட்டுகிற அளவுக்கு சம்பளம். டாக்ஸ் தவிர்க்க சீனியர் எல்லாரும் LIC தான் போடுவார்கள் இல்லை என்றால் ICICI அல்லது IDBI இன்ப்ரா ஸ்டரக்சர் பாண்ட் எடுப்பார்கள் அதற்கு 5 முதால் 6 % வருட வட்டி + டாக்ஸ் பெனிபிட் கிடைக்கும். நானும் முதல் இரண்டு வருடங்களுக்கு இந்த பாண்ட் வாங்கி ஆபீசில் விவரங்களை கொடுத்து TDSஐ குறைத்து வந்தேன்.

(தொடரும்)

Posted in Labels: |

என் அனுபவங்கள் -1

குறிப்பு : சிலருடைய மோசமான அனுபவங்கள் எல்லாம் உதாரணங்கள் அல்ல

நம்ம ராதாகிருஷ்ணன் அண்ணாச்சி ஒரு பதிவு போட்டிருந்தார் பக்கத்து சீட்ல சனி பாகம்1, பாகம்2 ன்னு அதுல அவருடைய பங்கு சந்தை அனுபவங்களை மிக சுவையாக எழுதியிருந்தார்.

நான் இந்த வலைப்பூவில் எங்காவது கேட்டது படித்தது என எதாவது எழுதியிருந்தாலும் என் அனுபவங்களை இதுவரை எழுதியதில்லை. புத்தகத்தில் படித்ததெல்லாம், நான் சொல்லவில்லை என்றால் கூட வேறு வழியில் கிடைக்க கூடும்.

ஆனால் ஒரே விசயத்தில் ஒவ்வொருவரின் அனுபவமும் வேறுபடும். இந்த பதிவுகள் யாருக்கும் பயன்படுகிறதோ இல்லையோ செய்த தவறுகளை திரும்ப செய்யாமல் இருக்க குறைந்த பட்சம் எனக்கே உதவியாக இருக்கும்.

நான் சின்ன பையனாக இருக்கும்போதே என் அம்மா மாதம் 15 ரூபாய் குடுத்து போஸ்ட் ஆபீஸில் RD கட்டி வர செய்தார்கள். அப்பல்லாம் வீட்டில உண்டியல் இருக்கும் அப்பா ஆபீஸ்ல இருந்து வந்ததும் பாக்கெட்ல சில்லரை எதாவது இருந்தா அப்பப்ப அதுல போட்டு வைப்பார்.

இதையெல்லாம் பாத்து வளந்த எனக்கு பணத்தை சேமிக்க வேண்டும் என்ற என்னம் சின்ன வயதில் இருந்தே இருந்தது. இப்பல்லாம் எத்தனை வீட்டுல உண்டியல் இருக்குன்னு தெரியலை. பணம் எங்கிருந்து வருதுன்னா ATM மிசின்ல இருந்து வருதுன்னு சொல்றவங்கதான் ஜாஸ்தி.

நான் படிச்சி முடிக்கும் வரை பணத்தின் கஷ்டம் தெரியாமல்தான் இருந்தேன். அப்பா எதாவது உருட்டி புரட்டி குடுத்துடுவார். ஆனால் வீண் விரயம் செய்ததில்லை.

பணத்தின் அருமையை அழகாக உணர்த்தியவன் என் நண்பன் பேர் சங்கர். நாங்க ரெண்டுபேரும் 1ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்புவரை பள்ளி தோழர்கள். அவங்க அப்பாவும் என் அப்பாவும் ப்ரெண்ட்ஸ் ஒன்றாக ரயில்வேயில் பணியாற்றியவர்கள்.

காலேஜ் முடிச்சி சென்னையில் ஒரு கம்பெனியில் சாதாரண வேலைக்கு 1000 ரூ சம்பளத்திற்கு சேர்ந்து கம்பெனி விட்டு கம்பெனி தாவி ரூ 5000 சம்பளம் அளவிற்கு வளர்வதற்குள் 2 - 3 வருடம் ஓடிவிட்டது.

சம்பாதிக்கிறதுல எதாவது மீதி இருந்தாதானே சேமிக்கிறது பத்தியெல்லாம் யோசிக்கனும். சம்பளம் 5000 ஆன பிறகு கொஞ்சம் பணம் Savings Accountல் இருக்க தொடங்கியது.

அப்போதுதான் என் நண்பன் சங்கர் என் ஊரில் ஒரு DTP சென்டர் ஆரம்பித்தான். அப்போது கொஞ்சம் பணம் அவனுக்கு ஹார்ட் டிஸ்க் வாங்க மற்றும் லேசர் பிரிண்டர் மாற்றவும் தேவைப்பட்டது அப்போது என்னிடம் இருந்த 15,000 ரூபாய்களை கொடுத்து உதவினேன். (இது நடந்தது 1998 - 99 இருக்கலாம்)

(தொடரும்)

Posted in Labels: |

ஆஃப் மார்க்கெட் ட்ரான்ஸ்பர்

இந்தியாவில் NSDL (National Securities Depositary Limited), CDSL (Central Depositary Services Limited)என இரண்டு டெபாசிடரிகள் உள்ளன. ஒரே டெபாசிடரிக்கு ஆஃப் மார்க்கெட்-ல் பங்குகளை மாற்றும் போது TIFD (Transfer Instruction for Delivery) ஸ்லிப் கொடுக்க வேண்டும்.

CDSL ல் இருந்து NSDL க்கோ அல்லது NSDL ல் இருந்து CDSL க்கோ பங்குகளை ஆஃப் மார்க்கெட்டில் மாற்ற IDT (Inter Depositary Transfer ) ஸ்லிப் கொடுக்க வேண்டும்.

Off market transfer charges 0.04% of total value of the shares.

முந்தைய பதிவில் ஆஃப் மார்க்கெட் ட்ரான்ஸ்பர் எவ்வாறு செய்வது என கணேஷ் கேட்டிருந்தார். கீழே உள்ள இணைக்கப்பட்டுள்ள படங்களை பார்க்கவும்.

இது நான் ஐசிஐசிஐ டீமேட் (NSDL)ல் இருந்து ரிலையன்ஸ் மணி (CDSL)க்கு மாற்ற கொடுத்த இன்ஸ்ட்ரக்ஷன்

படம் முழுமையாக தெரிய படத்தின் மேல் க்ளிக் செய்யவும்.

டார்கெட் க்ளையண்ட் ஐடி ரிலையன்ஸ்ல் லாகின் ஆனவுடன் ட்ரேட் பக்கத்தில் டிபி ஐடி என வரும். க்ளையன்ட் மாஸ்டர் ரிப்போர்ட் என ஒரு ரிப்போர்ட் கொடுத்திருப்பார்கள் அதிலும் இருக்கும். ISIN நம்பர் உங்கள் ஹோல்டிங் டிபியிலேயே இருக்கும் அல்லது http://www.nseindia.com/ ல் இருந்து பெறவும்.







இரண்டும் ஒரே டெபாசிடரியாக இருக்கும் பட்சத்தில் கொடுக்க வேண்டிய ஸ்லிப் TIFD கீழே






Posted in Labels: |

ரிலையன்ஸ் மணி இரண்டு நாள் அனுபவங்கள்

ரிலையன்ஸ் மணி
இரண்டு நாள் அனுபவங்கள்

நேற்றும் இன்றுமாக இரண்டாவது நாளாக ட்ரேட் செய்கிறேன் இதை வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது இருந்தாலும் ஒரு அறிமுகத்திற்காக.

ரிலையன்ஸ் மணிக்கும் ஐசிஐசிஐ டீமேட்டுக்கும் மெனுக்கள் எந்த குழப்பமும் இல்லை. இதில் BSE யிலும் மார்ஜின் ட்ரேட் செய்ய முடிகிறது ஐசிஐசிஐ-ல் மார்ஜின் ட்ரேடிங் NSE ல் மட்டுமே. அனைவரும் எச்சரித்திருந்தபடியே போர்ட்டல் மிக மெதுவாகவே வேலை செய்கிறது.

ரிலையன்ஸ் மணியில் Trade Now, Insta Trade என இரண்டு வழிகளில் ட்ரேட் செய்யமுடியும் என தெரிகிறது. நான் நேற்றும் இன்றும் ட்ரேட் செய்தது Trade now எனும் சாதாரண முறை.

Insta Trade நான் டீமேட் அப்ளை செய்யும் போது அப்ளை செய்யவில்லை, எனவே நான் இந்த ஆப்ஷனில் ட்ரேட் செய்ய இன்னும் ஒரு வாரம் ஆகும் என தெரிவித்தனர். இந்த Insta Trade நம் கம்ப்யூட்டரில் டெர்மினலை கொண்டுவரும் என தெரிகிறது (real time streaming). இது எப்படி விரைவாக இருக்கிறதா என்பதை வந்தவுடன் தெரிவிக்கிறேன்.

இந்த இரண்டு தினங்களில் நான் கண்டறிந்தது ‘Trade Now’ல் Order Book, Trade Book, Ledger Balance அனைத்தும் ஜாவா pop-up விண்டோவில் வருகிறது. ஒருமுறை வந்த pop-up விண்டோவை மூடாமல் வைத்துக்கொண்டால் ஒரு லிங்கிலிருந்து அடுத்தது மாறும் போது விரைவாக கிடைக்கிறது. உதாரணத்துக்கு ஆர்டர் புக்கிலிருந்து ட்ரேட் புக் அல்லது டீமாட் பாலன்ஸ்.

ஐசிஐசிஐ டீமெட்டில் இருந்து எல்லா ஹோல்டிங்குகளையும் off market ட்ரான்ஸ்பர் மூலம் ரிலையன்ஸ் மணி டீமேட்டுக்கு மாற்றியுள்ளேன். ஐசிஐசிஐ ப்ரோகரேஜ் ரெகமண்டேஷன்ஸ் நன்றாக இருப்பதாக படுவதால் அதை மூடாமல் வைத்திருக்கலாம் எனவும் நினைத்திருக்கிறேன்.

எது எப்படியோ நமக்கு லாபம் வந்தால் சரிதான். பார்ப்போம்.

Posted in Labels: |

பங்குகளின் தரம் ஆய்தல் -Fundamendal Analysis

பங்குகளின் தரம் ஆய்தல் (Fundamendal Analysis) Glossary

இதுவரை பார்த்துவந்த புதியவர்களுக்காக பகுதிகளில் இருந்து பங்குகளின் தர அடிப்படையில் தேர்வு செய்வது எப்படி? கவனிக்க வேண்டியன என்னென்ன? மற்றும் இதன் தொடர்பான பயனுள்ள வலை முகவரிகள்.

நிறுவன பெயர் , முகவரி, என்ன பிசினஸ் இவை எதற்கு என்றால் Bull Market இருக்கும் போது நிறைய லெட்டர் பேட் கம்பெனிகள் பங்கும் பறக்கும் ஆனால் Bear Market வரும் போது கீழே விழுந்தால் மேலே போகவே போகாது.

ஐ.டி, தொழில் நுட்பத்துறை எனில் யார் யார் க்ளையண்ட் அதன் வருங்கால பிசினஸ் எப்படி இருக்கும் என்பவை.

பங்கின் முக மதிப்பு (face value), மார்க்கெட் கேப்பிடலைசேஷன்.

வருடத்தின் அதிக பட்ச விலை மற்றும் குறைந்த பட்ச விலை. Investment Prespective ல் சந்தையை அனுகுபவர்கள் வருடத்தின் அதிக பட்ச விலை இருக்கும்போது வாங்கக்கூடாது. சந்தை விழும் சமயத்தில்தான் வாங்கவேண்டும் அது எவ்வளவு நல்ல நிறுவனமாக இருந்தாலும்.

கடந்த வருடங்களில் நிறுவனம் பங்கு முதலீட்டாளர்களுக்கு கொடுத்து வந்த டிவிடண்ட், போனஸ்.

அதே துறையில் உள்ள போட்டி நிறுவனத்துடன் லாப விகிதங்கள் ஒப்பீடு.

PE Ratio, EPS இதில் முக்கியமானது ஒத்த நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது PE குறைவாக இருக்க வேண்டும் EPS அதிகமாக இருக்க வேண்டும்.

இவையெல்லாம் பத்திரிகைகளிலும் வலைத்தளங்களிலும் எளிதாக கிடைக்கும் தகவல்கள்.

பயனுள்ள வலைகள்
www.nseindia.com
www.bseindia.com
www.moneycontrol.com
http://www.rediff.com/money/index.html
http://content.icicidirect.com/research/research.asp
http://www.investopedia.com/university/fundamentalanalysis/

Posted in Labels: |

புதியவர்களுக்காக - 7

PE Ratio & EPS (Price Earning Ratio & Earnings Per Share)

உதாரணத்துக்கு ABC என்ற ஒரு நிறுவனத்தின் பங்கை எடுத்துக்கொள்வோம்.

அதன் மார்க்கெட் விலை ரூ.100
வெளியிட்டுள்ள
மொத்த பங்குகள் 100000
என கொண்டால்

மார்க்கெட்
கேபிடலைசேஷன் = 100000 X 100 = 100 லட்சம்

அந்நிறுவனம் வருடத்திற்கு 10 லட்சம் லாபம் ஈட்டுகிறது என கொள்வோம்

EPS = 10 லட்சம் (லாபம்)/ 1 லட்சம் (மொத்த பங்குகள்)
= 10ரூ ஷேருக்கு

PE Ratio = பங்கின் விலை / EPS

= 100/10

= 10

ABC நிறுவனத்தின் PE Ratio 10


SENSEX / NIFTY ன் PE Ratio

ஒரு இன்டெக்ஸ்ஸின் PE கண்டுபிடிக்க அந்த இன்டெக்ஸிலுள்ள ஒவ்வொரு நிறுவன PE கண்டுபிடித்து அந்த நிறுவனத்தின் இன்டெக்ஸின் வெயிட்டேஜ் அளவைப் பொறுத்து எல்லாவற்றையும் சேர்க்கும் மதிப்பு ஆகும்.

ஒரு பங்கின் தரத்தை நிர்ணயிக்க EPS என்பது மிக அடிப்படியான அவசியமான அளவுகோலாகும்.

புதியவர்களுக்காக - 6

புதியவர்களுக்காக - 6

பங்கிலிருந்து வருமானம்

சமசீர் பங்கு (Equity)

ஈக்விடி ஒரு நிறுவனத்தில் நமது வரையறுக்கப்பட்ட உரிமையினை குறிக்கிறது. எவ்வளவு அதிகமான ஈக்விடி ஷேர் உள்ளதோ அந்த அளவு அதிக உரிமை. ஒரு நிறுவனத்தின் பங்கு வைத்திருப்பது என்பது ஷேர் வைத்திருக்கும் பல்லாயிர கணக்கானவர்களில் நீங்களும் ஒருவர். வைத்திருக்கும் பங்கின் அளவை பொருத்து நிறுவன எல்லா சொத்துக்களிலும் நீங்களும் ஒரு உரிமையாளர் (this means technically, you own a portion of every piece of furniture, trademark, contract, etc of the company).

உரிமையாளர் என்ற முறையில் நிறுவன வருமானம், ‘வோட்’டிங் உரிமை (Voting rights) போன்றவை உங்களுக்கு உண்டு. இன்னொரு முக்கியமானது நிறுவனம் சரியாக இயங்காமல் கடன் போன்றவை ஏற்பட்டால் ஈக்விடி ஷேர் ஹோல்டர்கள் அதற்கு பொறுப்பாளர்கள் அல்ல. அதிக பட்சமாக அந்த பங்கு விலை குறைந்து நாம் போட்ட முதலீடு நஷ்டமடையும்.

பங்கிலிருந்து வருமானம்

1. முதலீடு பெருகுதல் (Capital Appreciation)

பொதுவாக இந்த பங்குகள் NSE / BSE ல் லிஸ்ட் செய்யப்பட்டு வர்த்தகம் நடைபெறும் அப்போது பங்குகளின் விலை நிறுவன செயல்பாடுகள், லாப/நஷ்டம், புதிய ஒப்பந்தங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் ஏறி இறங்கும் வாங்கிய விலையை விட அதிகமாக இருக்கும் போது விற்பது இது முதலீடு பெருகுதல் (Capital Appreciation) எனப்படுகிறது.

2. போனஸ் ஷேர்கள் (Bonus Shares)

நிறுவனம் நன்றாக செயல்பட்டு லாபம் ஈட்டும் போது போனஸ் ஷேர்கள் அறிவிக்கப்படலாம். எல்லா நிறுவனங்களும் இது போல அறிவிப்பதில்லை அதனால் பங்குகளை தேர்ந்தெடுக்கும்போது அதன் கடந்த வருடங்களின் செயல்பாடுகளை கவனிக்க வேண்டியது மிக முக்கியம்.

3.ரைட்ஸ் (Rights Issue)

ரைட்ஸ் ஷேர்கள் இது நிறுவனங்கள் பின்பற்றும் இன்னொரு முறை. அதாவது நிறுவனம் புதியதாக வெளியிடும் பங்குகளை ஏற்கனவே அந்நிறுவன பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு குறைந்த விலைக்கு கொடுக்கும். இந்த ஷேர்களையும் நிறுவனத்திடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி வெளி மார்க்கெட்டில் மார்க்கெட் விலைக்கு விற்க்கலாம்.

4. டிவிடெண்ட் (Divident)

நிறுவனம் ஈட்டிய லாபத்தை அதன் பங்கு வைத்திருப்பவர்களுக்கு டிவிடெண்ட்டாக கொடுக்கலாம். இங்கும் கவனிக்க வேண்டியது கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை எல்லா நிறுவனங்களும் கொடுப்பதும் இல்லை. பங்குகளை வாங்கும்போதே இதை எல்லாம் கவனித்து வாங்க வேண்டும்.

பங்கு தேர்ந்தெடுக்கும் முறைகள் (Strategies)

1. பங்கின் விலை அடிப்படையில் வாங்குவது

அடிப்படையில் நல்ல ஒரு நிறுவனத்தின் (fundamentally strong company) பங்கு விலை குறைவாக இருக்கும் போது வாங்குவது. உதாரணத்திற்க்கு இப்போது IT பங்குகள்.

2. டிவிடெண்ட் தரும் பங்குகள்

தொடர்ந்து டிவிடெண்ட் கொடுக்கும் பங்குகளை வாங்குவது. நிறுவனம் நன்கு செயல்பட்டு லாபம் ஈட்டினால்தான் டிவிடெண்ட் தொடர்ந்து கொடுக்க முடியும் எனவே கடந்த வருடங்களில் டிவிடெண்ட் தொடர்ந்து கொடுத்து வந்த நிறுவன பங்குகளை கவனித்து விலை குறையும் போது வாங்கலாம்.

3.டைவர்சிபிகேசன் (Diversification)

மொத்த முதலீட்டையும் ஒரே நிறுவன பங்குகளை வாங்கக்கூடாது (Diversification). அதற்க்காக Diversification செய்கிறன் என 20 – 30 நிறுவன பங்குகளையும் வாங்க கூடாது (over diversification) அதை follow செய்வது கடினம்.

பங்கு வர்த்தகத்தில் அபாயங்கள் (Risks)

முதலாவது வட்டி விகிதங்கள் அதிகரித்தல், Inflation, ஆட்சி மாற்றங்கள், போர் அபாயங்கள் போன்றவை.

இரண்டாவது நிறுவனத்தின் துறை சார்ந்த காரணிகள் (Industry Risk), ஸ்ட்ரைக், உற்பத்தியை பெருக்கும் புதிய தொழில் நுட்பங்களை நிறுவனம் அமல்படுத்தாமல் இருப்பது இதனால் அதே துறையில் உள்ள வேறு நிறுவனங்களின் உற்பத்தி அதிகரித்து நாம் முதலீடு செய்துள்ள நிறுவன லாபம் குறைவது போன்றவை. முதலீடு செய்துள்ள நிறுவன செயல்பாடுகளை கவனிக்காமல் இருப்பதும் ஒரு risk அதனால் அந்நிறுவன செயல்பாடுகள் பற்றி தொடர்ந்து கவனித்து வரவேண்டும்.

Happy Investing.

புதியவர்களுக்காக - 5

புதியவர்களுக்காக - 5



பவர் ஆப் அக்குமுலேசன் (Power of accumulation)

இது ரொம்ப நாள் முன்பு இணையத்தில் படித்த ஆங்கில கட்டுரையின் தமிழாக்க முயற்சி.

ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தான் அவனை புகழ்ந்து பாடிய புலவனிடம் பரிசில் என்ன வேண்டுமோ கேள் என அரசன் அகங்காரத்துடன் சொன்னான். அதற்கு அந்த புலவர் அரசனின் அகம்பாவத்தை அழிக்கவேண்டும் என எண்ணி அரசே எனக்கு பெரிதாக எதுவும் வேண்டாம் சதுரங்க பலகை இருக்கிறதல்லவா அதில் 1ம் கட்டத்தில் ஒரு நெல்மணி தாருங்கள் 2ம் கட்டத்தில் 2, 3ம் கட்டத்தில் 2ம் கட்டத்தில் எவ்வளவு இருக்கிறதோ அதை அதே எண்ணால் பெருக்கினால் எவ்வளவு வருகிறதோ அத்தனை நெல்மணி தாருங்கள், 4வது கட்டத்தில் 3ம் கட்டத்தில் எத்தனை உள்ளதோ அதே எண்ணால் பெருக்க கிடக்கும் எண்ணிக்கை இது போன்று அந்த 64 கட்டத்தில் எவ்வளவு பிடிக்கிறதோ அது போதும் என சொன்னார்.

பொன்னோ பொருளோ கேட்பார் என எண்ணியிருந்த அரசனும் புலவனை எள்ளி நகையாடி சரி என சொல்லிவிட்டான் சதுரங்க பலகையும் வந்தது.

1வது கட்டம் = 1 நெல்மணி

2வது கட்டம் = 2 நெல்மணி

3வது கட்டம் = 4 நெல்மணி

4வது கட்டம் = 16 நெல்மணி

5வது கட்டம் = 256 நெல்மணி

6வது கட்டம் = 65636 நெல்மணி

7வது கட்டம் = 4294967296 நெல்மணி

8வது கட்டம் = 18446744073709551616 நெல்மணி

9வது கட்டம் = 18446744073709551616 X 18446744073709551616 நெல்மணி

சொன்ன வாக்கை காப்பாற்றவில்லை என்றால் என்ன அரசன் இந்த 9 கட்டத்திற்குள்ளாகவே அவன் நாட்டில் இருந்த அனைத்து நெல் மணிகளும் காலியாகிவிட்டது.

அரசன் புலவரின் புத்தி சாதுரியத்தை மெச்சி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான் என போகும் அந்த கதை.

சரி இந்த கதைக்கும் முதலீடு / பங்கு வர்த்தகம் பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்றால் நம் முதலீடும் அப்படித்தான் எவ்வளவுக்கு எவ்வளவு சிறு வயதில் ஆரம்பிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு பல்கி பெருகும் (வட்டி குட்டி போடும், அந்த குட்டியும் குட்டி போடும் அப்படி).

சரி இந்த கட்டுரை படித்த உங்களுக்கு சின்ன home work

9வது கட்டம் = ??
10வது கட்டம் = ??
..
..
64வது கட்டம் = ??

சும்மா கணக்கு போட்டு பாருங்க

டிஸ்கி : சேமிப்பை சிறு வயதிலிருந்தே துவக்குங்கள்

Posted in Labels: |

இன்சூரன்ஸ் -2

இன்சூரன்ஸ் முதல் பகுதி படிக்காதவங்க இங்க க்ளிக் பண்ணுங்க.

யூலிப் எனப்படும் யூனிட் லிங்க்ட் இன்சூரன்ஸ் ப்ளான் பற்றி தெரிந்துகொள்ள தென்றலின் பதிவுக்கு இங்க க்ளிக் பண்ணுங்க. யூலிப் பற்றிய இந்த பதிவுக்கு திரு. ஏவிஎஸ் அவர்களின் பின்னூட்டமும், நான் எழுதிய பின்னூட்டமும் மீள் பதிவு செய்யப்படுகிறது. (ஒரு பேக்கப் தானுங்க)



ஏவிஎஸ்
said...
ULIP திட்டத்தின் சாதக பாதகங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

நான் மூன்றாண்டுகளுக்கு முன் பஜாஜ் அலயன்சின் ULIP திட்டத்தில் சேர்ந்தேன். இந்த ஆண்டு என் மூன்றாண்டு முதலீடுகளும் எவ்வளவு பணம் ஈட்டியிருக்கிறது என்று பார்க்கும் போது ஆண்டுக்கு 8 சதவிகிதத்தை தாண்டவில்லை. இத்தனைக்கும் நான் எனது ULIP முதலீட்டில் 80% பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்திருந்தேன்.

இந்த மூன்றாண்டும் பங்குச் சந்தை அபாரமாக வளர்ந்தும் எனது ULIP முதலீடு பெருகாததற்கு காரணங்கள்

1. முதலாண்டில் எனது முதலீட்டில் 70 சதவிகிதம் முகவர் கமிஷனுக்கும் (30%), பஜாஜ் அலயன்ஸ் நிர்வாகச் செலவுகளுக்கும் போய் விட்டது

2. ஒவ்வொரு மாதமும் எனது ஆயுள் காப்பிற்கான தொகை முதலீட்டிலிருந்து கழிக்கப்பட்டு விடுகிறது. அதாவது உங்களுக்கு ULIP ஆயுள் காப்பீடு 1 லட்சம் என்றால், அதற்கான மாதக் கட்டணம் மாதம் ரூ 200 இருக்கலாம். அதை நீங்கள் செலுத்தும் தொகையிலிருந்து கழித்து விட்டு மீதிப் பணம்தான் முதலீடு செய்யப்படுகிறது.

3. ULIP முதலீட்டிற்குள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு திட்டத்திற்கும் 5% வருடாந்திர சேவைக் கட்டணம் வசூலிருக்கிறார்கள். இது தவிர, முதல் மூன்றாண்டுகளில் பஜாஜ் அலயன்ஸ் சேவைக் கட்டணமாக 3% வருடா வருடம் வசூலித்து விடுகிறது. பரஸ்பர நிதிகள் இந்த மாதிரி வசூலிப்பது 2% சதவிகிதத்தை தாண்டினாலே அது அதிகம் என்கிறார்கள். முதலீட்டில் ஆண்டொன்றுக்கு 5-8% இப்படி வீணாவது முறையன்று. அதிலும் முதலீடுகள் நஷ்டமடையும் ஆண்டுகளில், இந்த கட்டணங்கள் முதலுக்கே பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தும். நீங்கள் ஒரு ஆண்டு முதலீடே செய்யாவிட்டாலும் ஏற்கனவே உங்களது கணக்கில் இருக்கும் முதலில் இருந்து இந்தக் கட்டணங்களுக்கான பணத்தை எடுத்துக் கொள்வார்கள்.

4. ULIP திட்டத்தில் வரிச் சலுகை இருப்பது உண்மைதான். ஆனால், அந்த வரி சலுகை உங்களுக்கு வருமானம் 5 லட்சத்திற்கு கீழே இருந்தாலும், நீங்கள் ஆயுள் காப்பீட்டிற்காக செலுத்தும் தொகை 1 லட்சத்திற்கு கீழே இருந்தாலும் மட்டுமே

எனது பஜாஜ் அலயன்ஸ் ULIP அனுபவத்தை வைத்துப் பார்த்தால், ULIP-ஐ விட பரஸ்பர நிதித் திட்டங்களில் மாதாமாதம் முதலீடு செய்வதுதான் சாலச் சிறந்தது. கடந்த மூன்றாண்டுகளில் எனது பரஸ்பர நிதி முதலீடுகள், ஆண்டொன்றுக்கு 20 முதல் 70 சதவிகிதம் பணம் ஈட்டியிருக்கின்றன. அவற்றை நான் என் விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும் விற்கலாம்.

சந்தையின் போக்குகளையும், எனது நிதி நிலைமையையும் வைத்து கூடுதலாகவோ, குறைவாகவோ முதலீடு செய்யலாம். இந்த வசதிகள் ULIP-ல் கிடையாது.




மங்களூர் சிவா
said...

என்னை பொருத்தவரை ULIP என்பது ஓர் ஃப்ராட் திட்டம்.

மக்கள் இன்சூரன்ஸ் காப்பீடு என்றால் என்ன. ஏன் வேண்டும். நமக்கு எவ்வளவு தேவை மற்றும் இன்வஸ்ட்மெண்ட் இரண்டையும் தனி தனியாக பிரித்து பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும்

எல்.ஐ.சி யின் அன்மோல் ஜீவன் தவிர எந்த ஒரு திட்டமும் ப்யூர் இன்சூரன்ஸே கிடயாது.இதில் 5 லட்ச ரூபாய் காப்பீட்டுக்கு 30 வயது உடயவருக்கு வருடத்திற்கு ப்ரீமியம் சுமார் 1750 ரூபாய்தான்.

இதே அளவு காப்பீடுக்கு வேறு திட்டங்களில் மணி பேக் ஆகட்டும், யூலிப் ஆகட்டும் குறைந்த பட்சம் 20,000 முதல் 25,000 ரூபாய் கட்ட வேண்டும்

5 லட்சத்திற்கு ஒரு அன்மோல் ஜீவனும் ப்ரீமியம் ரூ 1750 மீதி 17,250 ஐ பங்கு சந்தையில் நேரடியாகவோ அல்லது ம்யூசுவல் ஃபண்ட் திட்டங்களிலோ போட்டுவந்தால் முதலீட்டின் மேல் வருடததிற்கு 20 முதல் 25 சதவிகிதம் வருமானம் எதிர் பார்க்க முடியும்.


Note : Concept of Insurance, Functioning of Insurance எல்லாம் படித்ததால், மற்றும் அத்துறையில் இருக்கும் சிலர் தொடர்பு இருந்ததாலும், இன்சுரன்ஸ் மற்றும் இன்வ்ஸ்மெண்ட் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்ற ஆதங்கத்தாலும் Fraud என்று சொல்லியிருப்பேன்

Fraud என்பது தகாத வார்த்தையாக இருந்திருக்கலாம் ஆனால் எனக்கு இன்னும் சரியான வார்த்தை கிடைக்கவில்லை.

MARKET JOKE

SEBI - new rule - along with Pan card , client must subbmit ECG & Cardic report to trade in NSE and BSE

Posted in |

இன்சூரன்ஸ்

நூறு கோடி மக்கள் வசிக்கும் இந்தியாவில் ஆயுள் காப்பீடு செய்து கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை இரண்டு கோடி மட்டுமே. அந்த இரண்டுகோடி மக்களிலும் பாதிக்கு மேற்பட்ட மக்கள் ஆயுள் காப்பீடு செய்து கொள்வதை ஒரு வகையான சேமிப்பாக - முதலீடாக, வரிச்சலுகை பெறுவதற்கான வசதியாக கருதிதான் அதில் பணம் போடுகிறார்கள்.

ஆயுள் காப்பீடு ஏஜென்ட் தொடர் தொந்தரவுக்காக மட்டும் பாலிஸி எடுப்பவர்களும் உண்டு. லைஃப் இன்ஸ்யூரன்ஸ் என்பது நமது குடும்பத்தினருக்காக நம்மை நம்பி இருப்பவர்களுக்காக நாம் செய்கின்ற கடமை. அவர்களுக்காக கண்ணியமாக நாம் செய்கின்ற செலவு அது.

அது நிச்சயமாக ஒரு முதலீடோ அல்லது சேமிப்போ கிடையாது. இன்றைக்கு இன்ஷுரன்ஸ் எல்லாவற்றிற்க்கும் வழங்கப்படுகிறது. நமது உயிர்,உடமை,தொழில் ஏன் நமது உடல் உறுப்புக்களைக்கூட இன்சூர் செய்து கொள்ளும் வசதி இருக்கிறது. இந்தியாவில் 13 பொது துறை இன்ஷுரன்ஸ் கம்பெனிகளும் மற்றும் பல தனியார் இன்ஷுரன்ஸ் நிறுவனங்களும் உள்ளன.

மரணம் என்றோ ஒரு நாள் நம் வாசலைத் தட்டும். அது இன்றாகவும் இருக்கலாம். மரணம் நிச்சயம் என்பதைத் தவிர வேறு எதுவும் நிச்சயம் இல்லை. தனது வருமானத்தினாலேயே தனது குடும்பத்தின் வாழ்வச்சு சுழல்கிறது என்ற நிலையில் இருக்கும் குடும்பத் தலைவர்கள்கூட ஒருவேளை எனது மரணத்திற்குப் பிறகு எனது குடும்பத்தின் நிலை என்ன என்று ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம்கூட சிந்திப்பதில்லை.

ஆயுள் இன்சூரன்ஸின் தேவையை உணர்ந்து இன்ஷுரன்ஸ் பாலிஸி எடுத்துக் கொள்பவர்களில்கூட 40 சதவீதத்தினருக்கும் மேற்பட்டவர்கள் அந்த பாலிஸியைத் தொடர்வதில்லை. இதற்கான காரணம் பெரும்பாலானவர்கள் எண்டோமென்ட் பாலிஸி எடுக்கிறார்கள். ஏஜெண்டுகளும் அவர்களுக்கு எண்டோமெண்ட் பாலிஸிகளில் 40 சதவிகிதத்திற்கும் அதிகமாக கமி­சன் கிடைக்கிறது என்பதற்காக அவற்றையே பரிந்துரை செய்கிறார்கள். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம்; இந்த ரக பாலிஸி எடுத்தால் பாலிஸி காலம் முடியும்போது நீங்கள் கட்டிய பணம் போனஸுடன் திரும்பக் கிடைக்கும் என்று ஒரு பெருந்தொகையைச் சொல்வார்கள். பொருளாதாரம் படித்தவர்கள்கூட அவர்கள் சொல்வதைப் பரிசீலனை செய்து பார்ப்பதில்லை என்பது விந்தைதான்.

வங்கியில் பிக்ஸட் செய்கிற பணத்திற்கு என்ன வட்டி கொடுப்பார்களோ, ஏறக்குறைய அதே வட்டிதான் போனஸாக எண்டோமெண்ட் பாலிஸிமூலமாக நமக்குக் கிடைக்கிறது. இந்தியாவினுடைய சராசரி பணவீக்கமான (Money Inflation) 5 சதவிகிதத்தை கணக்கில் எடுத்துப் பார்த்தால் நமக்கு அவர்கள் எண்டோமென்ட் பாலிஸியின் கால முடிவில் கிடைப்பதாகச் சொல்லும் பணம் ஏறக்குறைய நாம் பிரிமியமாக செலுத்துகின்ற பணத்தின் இன்றைய மதிப்பின் அளவில் மட்டுமே அன்றைக்கு இருக்கும் என்பது புரியும்.

நாம் பியூர் ரிஸ்க பாலிஸிகளையே எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் கட்ட வேண்டிய பிரிமியம் எண்டோமெண்ட் பாலிஸி பிரிமியத்தை விட பல மடங்கு குறைவு. ஆனால் இதில் பிரிமியமாக செலுத்தப்படுகிற பணம் திரும்பக் கிடைக்காதுதான். இருப்பினும்கூட பாலிஸிதாரர் பாலிஸி காலத்தில் மரணம் அடைந்தால் ஒரு பெரும் தொகை அவரது குடும்பத்தினருக்கு கிடைக்கும்.

நமது காருக்கு நாம் இன்ஷுரன்ஸ் எடுக்கும்போது... நமது கார் ஆக்ஸிடெண்ட் ஆகவில்லை என்றால் பிரிமியமாக செலுத்திய பணம் வீணாகப் போய்விடுமே என்று கருதுவதில்லை. விலை மதிப்பற்ற நமது உயிருக்கு பியூர் ரிஸ்க் இன்ஸ்யூர் (Pure Risk Insure) செய்து கொள்ளும்போது பிரிமியமாகச் செலுத்தும் பணம் தண்டம் என்று கருதுவது, கண்ணியமான சிந்தனை இல்லை. இன்ஸ்யூரன்ஸ் என்பது சேமிப்போ, முதலீடோ இல்லை. நான் அப்படித்தான் கருதுவேன்....

Posted in Labels: |

வரலாற்றை திரும்பி பார்ப்போம் - 2

இது ஜூன் 4 , 2006 ல் வெளியான பதிவு முத்து தமிழினி என்பவர் எழுதியது.

சில நாட்களுக்கு முன் இந்திய பங்கு சந்தைகளில் வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட்டது. நிதி அமைச்சர் சிதம்பரம் தலையிட்டு கவலைப்பட ஒன்றுமில்லை என்று அறிக்கை விட்டார்.ஒவ்வொரு முறை பங்கு சந்தை விழும்போதும் சிதம்பரம் இவ்வாறு அறிக்கை விடுவது வாடிக்கையாகிவிட்டது.ஒரு நிதி அமைச்சர் இவ்வாறு தலையிட்டு கருத்து கூறுவது சரியா என்பது ஒரு புறமிருக்க கம்யூனிஸ்டு தலைவர்கள் விடும் அறிக்கைகளால்தான் பங்கு வர்த்தகம் சரிவை சந்திப்பதாக ஒரு சாரார் கூறிவருகின்றனர்.

வெளியிலிருந்து பார்க்கும் கோயிஞ்சாமியாக எனக்கு தோன்றும் சில சந்தேகங்களை வைப்பதுதான் என் நோக்கம். பங்கு குறியீட்டு எண் வரலாறு காணாத அளவு ஏறிக்கொண்டே சென்றபோது பத்தாயிரம் எல்லாம் கம்மி என்றும் பதினாறாயிரம் வரை இந்த வருடமே ஏறும் என்றெல்லாம் பல வல்லுனர்களும் கருத்துக்கூறி வந்தனர்.இந்திய பொருளாதாரம் அந்த அளவு வலிமை வாய்ந்தது என்றெல்லாம் பல ஆதாரங்களை அள்ளிவிட்டு இவர்கள் கருத்துக்கூறி வந்தனர்.

கடந்த சில வாரங்களாக பங்குகள் சரிய ஆரம்பித்தவுடன் இவர்கள் கூறுவது என்னவெனில் மும்பை சென்செக்சின் உண்மையாக மதிப்பு 7800 - 8000 புள்ளிகள்தான் என்றும் இப்போது இருக்கும் 10000+ புள்ளிகள் நிலையே அதிகம் என்கிறார்கள். அரசியல் வாதிகள் கணக்காக பொருளாதார மேதைகளும் உளறிகொட்டுவதை பார்க்க மிக காமெடியாக உள்ளது.பங்கு மார்க்கெட் ஐந்தாயிரம் புள்ளிகளை தாண்டுமபோதே ரீடெய்ல் இன்வஸ்டர்ஸ் என்று அழைக்கப்படும் நம்மை போன்ற கோவிஞ்சாமிகளில் பலர் பங்குகளை விற்றுவிட்டார்கள்.பிறகு மார்க்கெட் நன்றாக ஏறியபின் உள்ளே நுழைந்த கோவிஞ்சாமிகள் பலர் கையை சுட்டுகொள்வது எதிர்ப்பார்க்கக்கூடியதே.

இப்போது கோயிஞ் சாமிகளான நாம் எந்த நிலையை எடுப்பது? சிதம்பரம் சொல்கிறார் என்று பங்குகள் வாங்குவதா ?நாக்கில் நரம்பில்லாமல் பேசும் இந்த பொருளாதார மேதைகளை நம்பி இவர்கள் அழும்போது அழுவதும் இவர்கள் சிரிக்கும்போது சிரிப்பதும் நமக்கு தேவையா?இன்னொரு புறம் வெளிநாட்டு பணம் ஏகப்பட்டது இந்தியாவில் வந்து குவிந்து இதனால் செயற்கையாக ஏற்றப்பட்டதுதான் பங்கு வர்த்தகம் என்ற கருத்தும் நிலவுகிறது.அதுவும் உண்மை என்றுதான் தோன்றுகிறது.

கடந்த சில வாரங்களில் மிகப்பெரிய தொகையை இந்த வெளிநாட்டு வியாபாரிகள் வெளியே எடுத்துள்ளார்கள். இதற்கே பங்கு மார்க்கெட் ரணகளமாகி உள்ளது. இந்த அழகில் பென்சன் நிதியை பங்கு மார்கெட்டில் முதலீடு செய்ய{இப்போதைக்கு ஐந்து சதவீதத்தை மட்டும்} அரசாங்கம் நினைப்பதாகவும் அதற்கு கம்யூனிஸ்டுகளும் தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அரசாங்கம் அலுத்துக்கொள்கிறது.

வழக்கம் போல் ஆங்கில மீடியாக்கள் ரொம்ப ஃபீல் செய்கின்றன.(இந்தியாவில் உள்ள ஆங்கில மீடியாக்களை போல் அயோக்கியர்கள் யாரும் இல்லை என்பது என் சொந்த கருத்து}.வயதான காலத்தில் நிம்மதியாக வாழ்வது என் ஒரே அடி்ப்படையில்தான் பென்சன் முதலான சலுகைகளை நம்பி சம்பளம் குறைவு என்றாலும் அரசாங்க வேலையில் சேர்கிறார்கள். இந்த பென்சன் பணத்தையும் பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்து யாரோ சாப்பிட்டுவிட்டு சென்றால் அது யாருக்கு லாபம்? எத்தனையோ அரசாங்க பாண்டுகள், செக்யூரிட்டுக்கள் ஆகியவை பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்புகளை அளிக்கின்றன.

இதனால்தான் கம்யூனிஸ்டுகள் இதை எதிர்க்கிறார்கள்.அவர்கள் இருப்பும் நாட்டிற்கு அவசியம்தான் என்று தோன்றுகிறது.இந்த அழகில் கேபிடல் அக்கவுண்ட் கன்பர்டபிளிட்டி என்று நமது ரூபாயை எங்கு வேண்டுமானாலும் மாற்றக்கூடிய அளவில் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சிதம்பரம் அண்ட் கம்பெனி மன்னாரு அண்ட் கம்பெனி கணக்காக அறிக்கை கொடுக்கிறது.

நல்லவேளை இதை ஏற்கனவே பல பொருளாதார நிபுணர்கள் எதிர்த்து உள்ளனர். பணவீக்கவிகிதம் என்று கூறி அரசாங்கம் வாரவாரம் ஒரு அறிக்கை வெளியிடுகிறது.இதன் அடிப்படையில் பல பொருளாதார முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அந்த மதிப்பீட்டையே குறைகூறியும் அரசாங்கம் அதில் தகிடுதத்தம் செய்கிறது என்று கூறியும் ஒரு கட்டுரையை நான் படித்தேன்.என்ன நடக்கிறது இந்த நாட்டில்?கோவிஞ்சாமிகளை காப்பாற்றுவது யார்?

இந்த பதிவிற்க்கு திரு. செல்லமுத்து குப்புசாமி எழுதிய பின்னூட்டம்

நிதியமைச்சர் ஒருவர் தினசரி பங்கு விலைகளைக் கண்காணித்து அறிக்கை விடுவது பேரவலம். அவருக்கு இதனை விட முக்கியப் பொறுப்புகள் இருக்குமெனக் கருதுகிறேன்.

விலை உயரும் போது மார்தட்டும் சந்தைகள் (BSE & NSE), செபி, அரசு, அந்தந்த நிறுவனங்கள் எல்லாம், விலை சரியும் போது வேறு காரணங்களைத் தேடுகின்றனர். அதுவும் ஒரு அவலம். கிரிக்கெட் மேட்ச் ஜெயிக்கும் போது ஆட்டக்காரர்கள் செய்யும் தவறுகள் அனைத்தும் மறக்கப் படுகின்றன. அதே சமயத்தில் அணி தோல்வியைச் சுவைக்கும் போது, சிறப்பான ஆட்டம் கூட விமர்சிக்கப் படுகிறது.

அதே போலத் தான் பங்குவிலையும்.. ஏறும் போது இறங்கும் போதும் அதற்குக் காரணம் கற்பிப்பதற்காத்தான் மிகப் பெரிய கூட்டம் கழுத்தில் 'டை'யைக் கட்டிக் கொண்டு சி.என்.பி.சி.யில் இரைச்சலைக் கிளப்புகிறது.

பிறரது ஆலோசனையின் பேரிலோ அல்லது சுய முடிவின் அடிப்படையிலோ நாம் முதலீடுகளைச் செய்து விட்டு அரசாங்கம் விலையச் சரியாமல் பாதுகாக்க வேண்டும் என எதிர்பார்ப்பது அறிவீனம் மட்டுமில்லாது பேராசையும் கூட.

Warren buffett once said, "Stock market is somewhat like a god. He rewards when you do good things. But, unlike real god he does not forgive on mistakes; rather punishes hard".

முத்து, நீங்கள் திறந்த வெளிச் சந்தை அமைப்பை ஒட்டுமொத்தமாக எதிர்ப்பதாகவும், பொதுவுடமைத் தனத்தை மாற்றமின்றி ஏற்பதாகவும் அறிகிறேன். அது குறித்து விவாதிக்க இங்கே இடம் போதாது. தனியாக வைத்துக் கொள்ளலாம்.

கேபிடல் அக்கவுண்ட் கன்பர்டபிளிட்டி' குறித்தான் உங்களது பார்வை என்னை மகிழச்செய்கிறது. தமிழ்மணத்தில் இது போன்ற விடயங்களை விவாதிக்க எவருமில்லை என எண்ணியிருந்தேன்.

Fundamental analysis & technical analysis என எத்தனை இருந்தாலும் maas psycology தான் சந்தையை இயக்குகிறது. 2005 மே மாதம் முதல் 2006 மே வரை சென்செக்ஸ் நிறுவனங்களின் செயல்பாடு சுமார் 25% (அதிகபட்சமாக) உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் குறியீடு 6,000 இல் இருந்து 12,000 ஐத் தொட்டது.

இதையெல்லாம் பார்க்காமல் சூதாடி விரலைச் சுட்ட பின் பிறரைக் குறை சொல்வது ஆரோக்கியமானதல்ல. குறியீடு உச்சத்தில் இருக்கும் போது இந்தியப் பங்குகளில் பணம் போட்ட (விரலைச் சுட்ட) அந்நிய முதலீட்டு நிறுவனங்களும் இல்லாமலில்லை. ஆனால் அவர்களது மொத்த நிதியில் அது சிறிய விழுக்காடாகவே இருந்திருக்கும். இன்னும் நிறையப் பேசலாம்.. இப்போதைக்கு இது போதும்..

இன்று மட்டுமின்றி என்றுமே, பணவீக்கத்தை விட, வங்கிகள் தரும் வட்டியை விட நீண்ட கால அடிப்படையில் பங்கு முதலீட்டில் (not trading & speculation) அதிகமான வளர்ச்சியை ஈட்ட முடியும் என நம்புகிறேன். அதற்காக நிரம்ப உழைக்க வேண்டியிருக்கும்.

-குப்புசாமி செல்லமுத்து

Posted in Labels: |

வரலாற்றை திரும்பிப் பார்ப்போம்

இந்திய பங்கு சந்தையில் கடந்த வருடங்களில் நடந்த நடைபெற்ற பழைய வரலாற்றை திரும்பிப் பார்ப்போம்.

கீழே உள்ள வலையில் இருக்கும் அனைத்து பதிவுகளும் படிக்க வேண்டியவை எனவே லிங்க் மட்டும் கொடுத்துள்ளேன்.

http://sadhayam2.blogspot.com/

Posted in Labels: |

புதியவர்களுக்காக - 4

பங்கு சந்தையை பொருத்தவரை எவ்வளவுக்கு எவ்வளவு விரைவாக கற்றுக்கொள்கிறோமோ அவ்வளவு நல்லது.

தவறுகள் செய்ய செய்ய நம் முதலீட்டின் / லாபத்தின் அளவை இழக்கிறோம். எல்லா விசயங்களையும் நாம் அனுபவித்துதான் தெரிந்துகொள்ளவேண்டும் என்பது இல்லை.

சில வருடங்களுக்கு முன் தமிழ்சசியின் பதிவில் படித்த ஒரு விசயம் நினைவிற்கு வருகிறது. பங்கு சந்தை சூதாட்டமா? எனும் தலைப்பில் அவர் எழுதியது. சீட்டாட்டம் ஒரு சூதாட்டம் அதற்கே நாம் எவ்வளவோ விதிமுறைகளை வைத்துள்ளோம் 13 சீட்டுதான் போட வேண்டும், ஒரு ஒரிஜினல் ரம்மி இருக்க வேண்டும், முதலிலேயே கவிழ்த்துவிட்டால் வெறும் 20 பாயிண்ட்கள் ஃபுல் என்றால் 80 பாயிண்ட்கள் இப்படி பல.

சூதாட்டத்திற்கே இவ்வளவு விதிமுறைகள் இருக்கும் போது பங்கு வர்த்தகத்தில் நாம் எந்த விதிமுறையையும் பின்பற்றாமல் நடந்தால் தோல்வியே மிஞ்சும்.

எனவே நிறைய படியுங்கள். படித்தவற்றிலிருந்து சில விதிமுறைகளை ஏற்பாடுத்திக்கொள்ளுங்கள். அதை மீறாமல் நடந்து வெற்றி பெறுங்கள்.

நண்பர் ஒருவரின் பங்கு சந்தை அனுபவங்கள். படிக்க வேண்டிய அருமையான பதிவு லிங்க் கீழே

http://rktimes.blogspot.com/2007/10/blog-post_17.html

http://rktimes.blogspot.com/2007/10/blog-post_18.html

Posted in Labels: |

MARKET CRASH HOW TO HANDLE

வாரத்தில 2 நாட்கள் நைட் ஷிப்ட் அதாவது ராத்திரி 8.00மணிக்கு போனா அதிகாலை2.00 - 2.30க்கு வீட்டுக்கு வந்திடலாம். சாதாரனமாக நைட் ஷிப்ட் இல்லாத நாட்களில் காலை 7 மணிக்கு வாக்கிங் போவதை வழக்கமாக கொண்டுள்ள உள்ள எனக்கு நேற்று நைட் ஷிப்ட் இல்லாத போதும் இன்று அலாரம் அடிக்கும் போது எழ முடியவில்லை சரி ஈவ்னிங் வாக் போலாம் என நினைத்து தூங்கி எழும்போது காலை 9.00 மணி.( இது எதாவது instinctஆ என தெரியவில்லை)

டிபன் சாப்பிட்டு மெதுவாக ICICIDIRECT ஆன்லைன் ட்ரேடிங் போர்டல் ஓப்பன் செய்தால் போர்ட்போலியோ மதிப்பு தாறுமாறாக இருக்கு. ட்ரேடிங் குவான்டிடி அப்டேட் ஆகவில்லை. சரி இது எதோ ICICI போர்டல் ப்ராப்ளம் என நினைத்து மற்ற வணிகதளங்களை செக் செய்யும் போது தெரிந்தது சென்செக்ஸ் 1700 புள்ளிகள்ள் சரிவு 10% down side circuit filter triggered in NSE அதனால் பங்கு வர்த்தகம் 1 மணி நேரம் தடை செய்யப்பட்டுள்ளது.

11மணிக்கு திரும்ப வர்த்தகம் துவங்கியது ஆச்சரியமூட்டும் விதமாக 1400 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் 18715.82 (-336) புள்ளிகளில் முடிந்தது.

இதற்குமுன் இது போல 2006 மே மாதம் மார்க்கெட் க்ராஷ் ஏற்பட்டு பங்கு வர்த்தகம் 1 மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டது.சாதாரனமாக நான் Day Trade செய்வதில்லை. சில சமயம் என் holdingல் இருக்கும் பங்குகளில் செய்வேன். இல்லாத பங்குகளில் Margin trade செய்வதில்லை. ஒரு காலத்தில் அதை மட்டுமே செய்துகொண்டிருந்தேன். அவ்வளவு ரிஸ்க் மற்றும் நேரத்தை விரயம் செய்தும் பெரிதாக ஒன்றும் சாதிக்க முடியவில்லை. Day Trade தவறில்லை அது இல்லை என்றால் கையில் இருக்கும் பங்குகளை பணமாக மாற்ற முடியாது.

சரி மார்க்கெட் க்ராஷ்க்கும் Margin Tradingக்கும் உள்ள சம்பந்தம் என்ன என்றால் இது அணுப்பிளவு மாதிரிதான் எல்லா ஸ்டாப் லாஸ்களும் ஒரே நேரத்தில் trigger ஆகி (எரிகிற தீயில் பெட்ரோல் ஊற்றுவதை போல) ஏற்கனவே இறங்கிக்கொண்டிருக்கும் சந்தையை குப்புற தள்ளும்.

இதில் நஷ்டப்படுவவர்கள் இந்த Day traders தான். Quality Stockகளில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு சிறிது நஷ்டம் ஏற்பட்டாலும் விரைவில் அந்த பங்கின்விலை மேலே வந்துவிடும்.

சரி இப்போது என்ன செய்யவேண்டும் முதலாவது

1. Dont Panic.
2. Be patience
3. Cash is the only defensive weapon so sit in cash.
4. If you feel quality stock available at reasonable / cheap price buy in small quantity.
5. Investment is not a one time act. It is continous process.

Winners are not quitters.

All the best.

Posted in Labels: |

MARKET TIMINGS

FROM TODAY ONWARDS,
THE MARKET WILL STRAT AND CLOSE AS NORMAL -
I.E 9.55 AM TO 3.30 PM

10 October 2007

Posted in Labels: |

புதியவர்களுக்காக-3

பங்கு வாங்கியாகி விட்டது. அதை எப்படி தொடர்ந்து கண்காணிப்பது எனவும் பார்த்தாகி விட்டது. இனி செய்ய வேண்டியது என்ன?ஜாக்கிரதையாய் இருப்பதுதான்.

யாரிடம் ஜக்கிரதையாய் இருக்க வேண்டும்? பங்கு சந்தையிடம்.

வாரன் பப்பட் பங்கு சந்தையை பற்றி மிஸ்டர் மார்க்கட் என்ற பெயரில் சுவரசியமாக ஒரு கதை சொல்லுவார். அந்த கதையை விட்டுவிட்டு அதில் உள்ள கருத்தை மட்டும் சொல்லுகிறேன். "Market is always correct.market is perfect " என்ற ஒரு மாயை பங்கு சந்தையில் நிலவுகிறது. பப்பட் அது தவறு என்கிறார். பங்கு சந்தை பெர்பெக்டாக இருந்திருந்தால் நான் இன்னும் ஏழையாக தான் இருந்திருப்பேன் என்கிறார். பப்பட்டின் வார்த்தைகளில் Market is not awlays correct.It is at times correct.There is a difference between both these views. The difference is like that between day and night.

பங்கு சந்தையின் விலை உண்மை விலையை விட அதிகமாக இருக்கும்போது பேசாமல் இருக்க சொல்கிறார். பங்கு சந்தை விலை உண்மை விலையை விட குறைவாக இருக்கும்போது பங்குகளை வாங்க சொல்கிறார். பங்கு விலை குறைந்தால் தான் அவர் மகிழ்வார்.கடையில் பொருள் விலை குறைந்தால் வாடிக்கையாளருக்கு மகிழ்ச்சி தானே? அது போல் தான் இதுவும் என்கிறார் பப்பட்.

நிறைய கம்பனிகளின் பங்குகளை வாங்குவதையும் அவர் ஆதரிக்கவில்லை. 20 கம்பனிகளின் பங்குகளுக்கு மேல் அவர் வாங்கமாட்டார். நாம் இன்னும் குறைவாக தான் வாங்க வேண்டும்.ஒரே கம்பனியில் பணம் போடுவதும் தவறு. 10 நல்ல கம்பனிகளை கண்டறிந்த பிறகு மேலும் பணம் போடவேண்டுமென்றால் அந்த 10லேயே போடலாம் அல்லவா? 11வது கம்பனி எதற்கு என கேட்கிறார் பப்பட். "which is the right time to sell?"' என்ற குழப்பம் பங்கு சந்தை துறைகளில் உண்டு. பப்பட் இதற்கு தெளிவான பதில் வைத்திருக்கிறார். NEVER என்பது தான் அவரின் பதில்.

நம்மால் அப்படி செய்ய முடியாமல் போனாலும் குறைந்தது 10 - 20 வருடங்களுக்கு வாங்கிய பங்கை விற்கக் கூடாது. பப்பட் இதற்கு வீட்டை உதாரனம் சொல்கிறார்.10 லட்சம் தந்து வீடு வாங்குகிறோம்.வாங்கிய மறுநாள் சந்தை மதிப்பு 11 லட்சம் ஆகிறது. லட்ச ரூபாய் லாபம் கிடைக்கிறது என்பதற்காக வீட்டை விற்போமா? சந்தை விலையை பற்றி கவலைப்படவே மாட்டோம் அல்லவா? அதுபோல் தான் பங்குகளும் என்கிறார் பப்பட்

புதியவர்களுக்காக - 2

ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்குவதற்கு முன் அந்த நிறுவனம் பற்றி அதன் செயல்பாடுகள், லாபம் ஈட்ட கூடிய வழிகள், அதன் கடந்த ஆண்டுகளின் லாப நட்ட கணக்கு, P/E , EPS போன்றவற்றை ஆரய்ந்து பின்னர் வாங்க வேண்டும். இவை எல்லாம் http://www.nseindia.com/, http://www.bseindia.com/ மற்றும் பல இணையதளங்களில் கிடைக்கும்.

விலை குறைவாக இருக்கிறது என ஊர் பேர் தெரியாத கம்பெனி குப்பை பங்குகளை வாங்காதீர்கள்.

அவசர தேவைகளுக்காக என இருக்கும் பணத்தை ஷேர்களில் முதலீடு செய்யாதீர்கள். குறைந்த பட்சம் ஒரு ஆண்டிலிருந்து மூன்றாண்டுகள் காத்திருக்க முடியும் எனும் பட்சத்தில் முதலீடு செய்வது நல்லது.

கண்ணை மூடிக்கொண்டு நண்பர்கள் சொன்னார்கள் (TIPS), வேறு யாரும் சொன்னார்கள் என்று எதையும் வாங்காதீர்கள்.

எவ்வளவுதான் நல்ல நிறுவனமாக இருந்தாலும் எல்லா பணத்தையும் ஒரே நிறுவன பங்குகளில் முதலீடு செய்யாதீர்கள். வேறு வேறு துறைகளில் உள்ள நல்ல நிறுவனங்களின் பங்குகளில் பிரித்து முதலீடு செய்வதால் ஒரு நிறுவன பங்கு நன்றாக செயல்படாமல் நட்டம் ஏற்பட்டாலும் வேறு நிறுவன பங்குகள் நட்டத்திலிருந்து காப்பாற்ற உதவும். உதாரணத்திற்கு சாப்ட்வேர் என்றால் டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ் டெலிகாம் என்றால் ரிலயன்ஸ் கம்யூனிகேசன், பார்தி ஏர்டெல், இஞ்சினியரிங் துறை என்றால் எல்&டி, பி.எச்.இ.எல்.

உங்களுக்கு பங்கு சந்தை பற்றி நல்ல அனுபவம் வரும் வரை தின வர்த்தகம் (Day Trading) செய்யாதீர்கள்.

வாங்கிய பங்கு குறைந்த காலத்திலேயே 10 - 15 சதவிகிதம் லாபம் அடைந்திருந்தால் பங்குகளில் ஒரு பகுதியை விற்று பணத்தை தயாராக வைத்திருப்பது நல்லது. விலை குறந்தால் திரும்பவும் வாங்கலாம். விலை குறையவில்லை என்றாலும் பாதகமில்லை.

தொடர்ந்து பங்கு சந்தையில் என்ன நடக்கிறது என்பதை பற்றி தொலைகாட்சி, பத்திரிகை, இணையம் மூலமாக படித்து கவனித்து வாருங்கள்.

வாங்க பணம் பண்ணலாம் , ஸ்டார்ட் மியூஜிக்.

என்னுடைய இன்னொரு வலைப்பூ பார்க்க இங்க க்ளிக் பண்ணுங்க.

புதியவர்களுக்காக

எல்லாரும் ஷேர் மார்க்கட்ல பணம் எக்கச்சக்கமா சம்பாதிக்கறாங்க நாமும் சம்பாதிப்போம் அப்படின்னு குருட்டான்போக்கில இறங்கினால் நஷ்டம்தான் மிஞ்சும். ஒன்றை உடனடியாக பத்தாக்குவதற்கு ஷேர்மார்க்கட் ஒன்றும் சூதாட்டகளம் அல்ல.

பங்கின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்திற்கு முக்கிய காரணம் Law of Demand and Supply அதாவது வாங்குபவர்கள் அதிகம் இருந்து விற்பவர்கள் குறைவாக இருந்தால் பங்கின் விலை ஏறும் அதே போல வாங்குபவர்கள் குறைவாக இருந்து விற்பவர்கள் அதிகம் இருந்தால் விலை சரியும்.

நிறுவனத்தின் நிர்வாகம் நன்றாக இருந்து லாபம் ஈட்டுவது, புதிய கம்பெனிகளை வாங்குவது (acquisitions) போன்ற சமயங்களில் நிறைய பேர் அந்த நிறுவன பங்கை வாங்க முயலும் போது (Demand) பங்கின் விலை ஏறும்.

நிறுவனத்தின் நிர்வாகம் சரியாக இல்லாமல் இருந்து அல்லது வேறு காரணங்களால் ஈட்டும் லாபம் குறைவது போன்ற சமயங்களில் பங்கை விற்க நிறைய பேர் முயலும் போது (Supply) விலை குறையும்.

பங்கின் விலை ஏற்ற இறக்கத்திற்கு இது மட்டுமே காரணம் அல்ல. வரும் பதிவுகளில் பார்ப்போம்.

என்னுடைய இன்னொரு வலைப்பூ பார்க்க இங்க க்ளிக் பண்ணுங்க.

டீமேட் தொடங்குவது எப்படி

நாங்க எல்லாம் இப்பத்தான் இந்த பள்ளீக்கூடத்துல சேர்ந்துருக்கோம். அதனால demat account எப்படி open பண்றதுன்னு சொன்னீங்கன்னா ரொம்ப சௌகரியமா இருக்கும்.
Rufesarul


ரூபஸ் உனக்கு ஐசிஐசிஐ வங்கியில் பவர் பே அக்கவுண்ட் இருப்பதால் ஐசிஐசிஐயிலேயே டீமேட் ஓப்பன் பண்ணவும். பவர் பே அக்கவுண்ட் இருப்பவர்களுக்கு முதல் வருடத்திற்கு ப்ரீ நீ பணம் எதுவும் கொடுக்க தேவை இல்லை.

ஒரு போட்டோ, அட்ரஸ் ப்ரூப்க்காக லேட்டஸ்ட் பாங்க் ஸ்டேட்மெண்ட், ஒரு ரூபாய்க்கான ஒரு செக் லீப் (MICR நம்பருக்காக), பான் (PAN) காப்பி, (பான் ஒரிஜினல் கொண்டு போக வேண்டும் பார்த்துவிட்டு கொடுத்துவிடுவார்கள்) ஆகியவை தேவைப்படும்.

நாமினேசன் பாரம்மில் நாமினி போட்டோ, கையெழுத்து தேவைப்படும் கண்டிப்பான முறையில் நாமினி பெயரை சேர்க்கவும். தப்பி தவறி நாளை எதாவது ஒன்று ஆகிவிட்டால் கஷ்டப்பட்டு சேமித்தது குடும்பத்தினருக்கு கிடைக்கும்.

பங்கு வாங்கி விற்பது சூதாட்டம் அல்ல என்பதை கற்றுணர்ந்து முறையாக செய்தால் கண்டிப்பாக அதில் வெற்றி பெறலாம்.

வாழ்த்துக்கள்

குறிப்பு
ஐசிஐசிஐயில் சம்பள கணக்கு இல்லாதவர்கள் மேலே உள்ள டாகுமெண்ட்களுடன் அருகிலுள்ள எதாவது ஒரு புரோக்கரை அணுகி டீமேட் தொடங்கலாம்.

டீமேட் தொடங்க முதலில் சுமார் 500 ரூபாய் வரை சார்ஜ் செய்வார்கள் இது ப்ரோக்கருக்கு ப்ரோக்கர் சிரிது வேறுபடும்.

உதாரணத்துக்கு
1. Sharekhan
2. Geogit Securities
3. Motilal Oswal Securities
4. Uti Securities
5. Ananth Rathi Securities
6. Reliance Money
7. Karvy

உங்களுக்கு இணைய இனைப்பு இருந்து அவ்வப்போது பார்க்க முடியும் எனில் இணைய தள மூலமாக ட்ரேட் பண்ணுவது நல்லது. இணைய இனைப்பு இல்லாதவர்கள் போன் மூலமாக ப்ரோக்கர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பங்குகளை வாங்கி விற்கலாம்.

என்னுடைய இன்னொரு வலைப்பூ பார்க்க இங்க க்ளிக் பண்ணுங்க.

Posted in Labels: |

CASINO SIP

Experienced gamblers manage bets carefully. With the odds in most casino games favour the house, a clever gambler can improve chances by handling stakes right. In European roulette, there are 18 numbered red slots and a zero. A bet on either colour offers even money while the odds on winning a given colour bet is 18:19 against.

Martingale and D’Alembert betting systems use increments to try and improve the odds. Both systems increase stakes after each loss. The hope is that wins (although a little fewer in number) will generate enough to balance off more frequent losses.

A Martingale system doubles stakes after every losing bet. This is im-pratical both in a casino with an upper limit and in the stock market. The D’Alembert system adds a smaller; pre-set increment after each losing bet.

A Paroli system tries the opposite strategy – it increases stakes following a win and lowers stakes after a loss. Implicitly, a Paroli system hopes for “runs” – that is, a trend of successively higher stakes.

There are some interesting parallels between betting systems and standard methods of systematic investing. There are also obvious differences.

The biggest difference: Every spin of an unbiased roulette wheel is an independent event. It is uninfluenced by previous spins. However, the stock market offers trends; even in a perfect market with random price fluctuations, prices are benchmarked to previous price – so interdependence exists. So, successive gains (or losses) are more likely in the stock market.

A SIP averages down. SIP returns are always superior to lump-sum investments any time there are positive returns at all. Suppose you use a D’Alembert – system to weight a SIP. That is, every time NAV drops, you increase the SIP. That should improve returns.

A casino SIP is not difficult to implement. Here are the rules:

Every month, compare prevailing NAV to the NAV of the previous SIP.
If the NAV is same or higher, invest the same amount as last month.
If the NAV is lower, do a 20 per cent D’Alembert – invest 20 percent more.

I would do this only with a highly rated fund which has a long term track record. That’s why I am confident that falls are temporary and my long term return will be positive.

Doing test runs with NAVs of eight mutual funds from June 2002 onwards, one discovers that the differential is positive in all cases for D’Alembert-style SIPs. During this five year period, there were 44 month with positive month-on-month NAV growth versus 15 months with negative month-on-month returns.

But the difference are very small-hardly enough to be worth the trouble. Even with a doubling Martingale type SIP, where one doubles SIP every time NAV drops, large excess returns aren’t available. May be a casino style SIP offers larger rewards if the time period includes a long bearish phase but we don’t have a data to test the hypothesis.

However even though it doesn’t gain a lot, casino style SIPs may still be useful from a behavioural standpoint. Most investor have a psychological barrier to increase the exposure in losing situations. Both Common sense and the result generated here suggest that this is a good strategy and a casino style SIP may encourage this.

Now look at Paroli-type methods. Paroli involves averaging up or pyramiding. It is a standard traders technique. Good traders often add to winning positions. The average cost rises but if a trend is running in favour, you are betting on a “sure thing”. Pyramiding is less common with investors. But even Warren Buffet has been known to increase his stake in a company even after the share price has risen.

Across our test population and time frame, a Paroli-style SIP gives marginally lower returns than a normal SIP. But it does commit more resources to the stock market during the extended bull run.

The utility of Paroli systems could lie in that it helps fine tune asset allocation. A big bull run is a situation when investor should be more fully-invested. A Paroli encourages the movement of cash from lower yield assets into equity in such situations. Of course, it may also tempt somebody to time the market.

என்னுடைய இன்னொரு வலைப்பூ பார்க்க இங்க க்ளிக் பண்ணுங்க.

Posted in Labels: |

Change in market timings due to Sun Outage

Change in market timings due to Sun Outage

Due to heavy solar activity, the VSAT services are likely to be disrupted from September 25, 2007 to October 09, 2007 (both days inclusive).


Revised trading session timings for Equity and Derivatives Segment, from September 25, 2007 to October 09, 2007 (both days inclusive) are as follows

Session
Start Time End Time
9 : 55 a.m. 11 : 25 a.m.
Resumption of Continuous Session
12 : 10 p.m. to 4 : 15 p.m.
No trading due to Sun Outage(only Log-in session available)
11 : 25 a.m. to 12 : 10 p.m. (No trading)

என்னுடைய இன்னொரு வலைப்பூ பார்க்க இங்க க்ளிக் பண்ணுங்க.

Posted in |

மோதிலால் ஓஸ்வால் ரெகமண்டேசன்

இது மோதிலால் ஓஸ்வால் புரோக்கரேஜால் கொடுக்கப்பட்ட ரெகமண்டேசன்.



என்னுடைய இன்னொரு வலைப்பூ பார்க்க இங்க க்ளிக் பண்ணுங்க.

Posted in Labels: |

இந்திய பங்கு சந்தை அடிப்படை தகவல்கள் 2

பங்குகளை திரும்ப பெறுதல் (Buy Back)
பெயரிலேயே இருக்கிறது. நிறுவனத்தின் பங்குகளை வைத்திருப்பவர்களிடமிருந்து நிறுவனம் திரும்ப வாங்கிக்கொள்ளும் செயல்.

இது பலவிதமாக நடக்கலாம் பங்குகளை வைத்திருப்பவர்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட விகிதத்திலோ (proportionate basis), செகண்டரி மார்க்கெட்டிலோ அல்லது புக் பில்டிங் பிராசஸ் மூலமாகவோ நடக்கும்.

செட்டில்மெண்ட் சைக்கில் (Settlement Cycle)
பங்கு பரிவர்த்தனை கணக்குகளை செட்டில் செய்ய எடுத்துக்கொள்ளும் கால அளவு
தேசிய சந்தையில் புதன் முதல் செவ்வாய் வரை
மும்பை சந்தையில் திங்கள் தொடங்கி வெள்ளி

ரோலிங் செட்டில்மெண்ட் (Rolling Settlement)
இது ஒவ்வொரு நாளும் நடைபெற்ற வர்த்தகத்தை குறிப்பிட்ட வர்த்தக தின இடைவெளிக்குள் செட்டில் செய்வதை உறுதி செய்கிறது. தற்போதைக்கு இது ஐந்து வர்த்தக தினங்கள்.

ஷார்ட் செல்லிங் (Short Selling)
இது சட்டப்படி அனுமதிக்கப்பட்ட வர்த்தக முறை. அதாவது உங்கள் கணக்கில் இல்லாத ஷேர்களை விற்கலாம் ஆனால் அன்றைய தின வர்த்தகம் முடியும் முன் திரும்ப வாங்கி கணக்கை நேர் செய்ய வேண்டும். அதேபோல வாங்கியும் விற்கலாம் பங்கின் விலை ஏற்ற இறக்கத்தை பொறுத்து லாபமோ / நட்டமோ ஏற்படும் சுருங்க சொன்னால் வெறும் கையில் முழம் போடும் முறை ரிஸ்க் எடுக்க வேண்டும்.

ஆக்சன் (Auction)
இது பங்குகளை வாங்கிவிட்டு பணம் செலுத்தாமல் இருந்தாலோ இல்லாத பங்குகளை விற்றுவிட்டு டெலிவரி கொடுக்காமல் இருந்தாலோ பங்கு சந்தை உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை. இதற்காக தனி மார்க்கெட் உள்ளது. செபி விதிமுறைகளின் படி இது நடக்கும்.

டீமாட் (DEMAT)
டீமாட் டீமெட்டீரியலைசேசன்(Dematerialisation)என்பதின் சுருக்கம்.

அதாவது ‘டீமாட்’தான் நீங்கள் வாங்குகின்ற அல்லது விற்கின்ற பங்குகளை வைத்திருக்கும் கணக்கு. சில வருடங்களுக்கு முன்பாக பங்குகள் டாக்குமெண்டுகளாக (Physical paper documents) இருந்தது அப்போது தொலைந்து போவது, போஸ்டில் அனுப்பும் போது தாமதமாகுவது, விற்கும்போது கையெழுத்து மேட்ச்சிங் ஆகாமல் கம்பெனியால் நிராகரிக்கப்படுவது போன்ற பல பிரச்சனைகள் இருந்து வந்தது.

இப்போது கணிணி மயமாக்கிவிட்டார்கள் எனவே அது போன்ற பிரச்சனைகள் இல்லை அதுதான் டீமாட்.

டெபாசிடரி (Depositary)
டெபாசிடரியை பங்குகளின் கணக்கை கையாளுகின்ற வங்கி என சொல்லலாம். தற்போது இந்தியாவில் 1. NSDL (National Securities Depositary Limited), 2. CDS (Central Depositary Services) என இரண்டு டெபாசிடரிகள் உள்ளது.

டெபாசிடரி பார்டிசிபன்ட் (Depository Participant)
இது பாங்க் அல்லது புரோக்கர் NSDL ன் பார்ட்னர்கள் டீமாட் அக்கவுண்ட்டை வழங்குபவர்கள். ஒவ்வொரு டெபாசிடரி பார்டிசிபன்ட்டும் டெபாசிடரியுடன் விசாட் (VSATS) மூலம் இணைக்கப்பட்டிருக்கும்.

ஆர்பிட்டரேஜ் (Arbitrage)
ஒரு நிறுவனத்தின் பங்கு இரு வேறு சந்தைகளில் பட்டியலிடப்பட்டு வர்த்தகம் ஆகும் போது இரு சந்தை விலைகளுக்கும் உள்ள வித்தியாசம். உதாரணத்திற்கு இன்போசிஸ், ரிலையன்ஸ் பங்குகள் NSE, BSE ல் வர்த்தகம் ஆகின்றன.

ஐ.பி.ஓ (IPO Initial Public offer)
ஒரு நிறுவனம் முதல் முறையாக பங்குகளை வெளியிடுவதற்கு ஐ.பி.ஓ என்று பெயர். ஐ.பி.ஓவில் கிடைக்கும் பங்குகள் நிறுவனத்திடமிருந்து நேரடியாக பெறப்படுபவை.

புக் பில்டிங் (Book Building)
ஐ.பி.ஓ வில் வெளியிடும் பங்கின் விலையை bidding மூலம் தீர்மானிக்கும் தீர்மானிக்கும் முறை. இந்த முறையில் மட்டும் இல்லாமல் குறிப்பிட்ட விலையிலும் (Fixed price issue) பங்கு வெளியிடுவதும் உண்டு.

என்ன நண்பர்களே படித்து குழம்ப வேண்டாம் இவை எல்லாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய மிக அடிப்படை தகவல்கள்.

வெற்றிகரமாக சந்தையில் பணம் சம்பாதிக்க இன்னும் பல உத்திகளும் சில ஒழுக்க முறைகளும் வேண்டும். அவை வரும் பதிவுகளில்

என்னுடைய இன்னொரு வலைப்பூ பார்க்க இங்க க்ளிக் பண்ணுங்க.

Posted in Labels: |

Clearing and Settlement







என்னுடைய இன்னொரு வலைப்பூ பார்க்க இங்க க்ளிக் பண்ணுங்க.

Posted in Labels: |

இந்திய பங்கு சந்தை அடிப்படை தகவல்கள் 1

இந்திய பங்கு சந்தை
அடிப்படை தகவல்கள் (BASICS)



பங்கு சந்தை
விற்பவர்களும் வாங்குபவர்களும் வரும் இடம். இது ஒரு இடமாக (physical trading floor) இருக்கலாம் அல்லது ஊடகமாக (Virtual Environment) இருக்கலாம்.

எலெக்ட்ரானிக் ட்ரேடிங் (Electronic trading )
வி-சாட்(VSAT) மூலமாக பங்கு சந்தையும் புரோக்கர்களின் அலுவலகத்தையும் இனைத்து டெர்மினல் மூலமாக வர்த்தகம் செய்யும் முறை.

இந்திய பங்கு சந்தைகள் (Exchanges)
மும்பை பங்கு சந்தை BSE (Bombay Stock Exchange)
தேசிய பங்கு சந்தை NSE (National Stock Exchange)
இதை தவிர ஒன்றினைக்கப்பட்ட 20 ரீஜியனல் சந்தைகளும் இருக்கிறது.
பி.எஸ்.சியும் என்.எஸ்.சியும் வி.சாட் மூலமாக இந்தியா முழுவதும் பங்கு வர்த்தகத்தை வழங்குகிறது.

பங்கு சந்தை குறியீடு (Index)
சென்செக்ஸ் (பி.எஸ்.சியின் முப்பது பெரிய கம்பெனிகள் அடங்கிய குறியீடு)
நிப்டி (என்.எஸ்.சியின் ஐம்பது பெரிய கம்பெனிகள் அடங்கிய குறியீடு)

புரோக்கர் (Broker)
செபி (Securities and Exchange Board of India) விதிமுறைகளின்படி பி.எஸ்.சியிலோ, என்.எஸ்.சியிலோ அல்லது இரண்டிலுமோ பதிவு செய்து கொண்டவர்கள். இவ்வாறு பதிவு செய்தவர்கள் மட்டுமே சந்தையை இயக்க முடியும். உதாரணம் ஐசிஐசிஐ செக்யூரிடீஸ், மோத்திலால் ஓஸ்வால், ஷேர்கான், ஜியோஜிட்

சந்தையில் பங்கேற்கும் முறை
எதாவது ஒரு புரோக்கரை தேர்ந்தெடுத்து அதற்கான அக்ரிமெண்ட் போட்டுக்கொண்டு தொலை பேசி மூலமாகவோ அல்லது இனைய தள மூலமாகவோ பங்கேற்கலாம்.

காண்ட்ராக்ட் நோட் (Contract Note)
நீங்கள் வாங்கவோ விற்கவோ செய்ததை வர்த்தகம் நடைபெற்ற நாள், தேதி, நேரம், விலை, எண்ணிகை போன்ற விவரங்களை குறித்த அதற்குறிய படிவம். இது வர்த்தகம் நடைபெற்ற 24 மணி நேரத்துக்குள் கொடுக்கப்பட வேண்டும் என செபி (Securities and Exchange Board of India) சொல்கிறது.

புக் குளோசர் / ரெக்கார்ட் டேட் (Book Closure / Record Date)
புக் குளோசர் மற்றும் ரெக்கார்ட் டேட் நிறுவனம் குறிப்பிட்ட ஒரு தேதியில் அதன் ஷேர் யார் யாரிடம் உள்ளது என்பதை தீர்மானிக்கும் காரணி.

இந்த புக் குளோசர் டேட் அவ்வப்போது நிறுவனத்தால் அறிவிக்கப்படும். டிவிடன்ட், போனஸ் போன்றவை ஒரு ‘குறிப்பிட்ட நாளில்’ (அந்த குறிப்பிட்ட நாள் ரெக்கார்ட் டேட் எனப்படும்) அந்த நிறுவன ஷேர் வைத்திருப்பவர்களுக்கு வழங்க இது பயன்படுகிறது.

நான் டெலிவரி பீரியட் (Non Delivery Period)
எப்போது நிறுவனம் புக் குளோசர் தேதி அறிவித்திருக்கிறார்களோ அப்போது அந்த ஷேர்களை வர்த்தகம் மட்டுமே நடத்த முடியும் நம் கணக்கில் உடனடியாக வரவு வைக்க முடியாது. புக் குளோசர் தேதி முடிந்த பிந்தான் நம் கணக்கிற்கு வரும்.

எக்ஸ் டேட் (Ex-Date)
நோ டெலிவரி பீரியட்டின் முதல் நாள் எக்ஸ் டேட். இந்த எக்ஸ் டேட்டிற்கு பிறகு வாங்கப்படும் ஷேர்களுக்கு டிவிடன்ட்/போனஸ் போன்றவை கிடைக்காது.

போனஸ் (Bonus)
நிறுவன நிர்வாகத்தால் ஷேர் வைத்திருப்பவர்களுக்கு அதீத லாபத்தை பகிர்ந்தளிக்கும் ஒரு முறை.

பங்கு பிரிப்பு (Split)
பங்கின் முக மதிப்பை குறைத்து பங்குகளை அதிகரிக்கும் ஒரு முறை. உதாரணத்திற்கு 10ரூ முக மதிப்புடைய 100 பங்குகள் உங்களிடம் இருந்தால் முக மதிப்பு 2ரூ ஆக பிரிக்கும் போது உங்கள் கணக்கில் 500 பங்குகள் இருக்கும்.


என்னுடைய இன்னொரு வலைப்பூ பார்க்க இங்க க்ளிக் பண்ணுங்க.

Posted in Labels: |

பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை

பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை



பொருள் ஈட்டுவது எப்படி ஒரு கலையோ அதே போல ஈட்டிய பொருளை காப்பதும் அதை பெருக்குவதும் ஒரு கலையே. இதைபற்றி இதற்கு முன்னரே அறிந்திருந்தாலும், பலர் எழுதியிருந்தாலும் சில விசயங்கள் எத்தனை தடவை பேசினாலும் சலிக்காது அதில் இதுவும் ஒன்று என்பது என் நம்பிக்கை. இன்றைய தமிழ் சினிமா ‘பொருள்’ என்பதற்கு வேறு அர்த்தம் கொடுத்திருக்கிறது அதில்ல இது.

செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமையே நமது செல்வம். எதை செய்தாலும் அதை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதே அதன் பொருள். ஆழம் தெரியாம காலை விடக்கூடாதுன்னு பெரியவர்கள் சொல்வார்கள். அதாவது ஒரு செயலை செய்யும் முன் அதை பற்றி நன்கு அறிந்து பின் செயல்பட வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை அது.

தண்ணீரில் இறங்காமலே நீச்சல் கத்துக்க முடியுமா? முடியாது. இறங்கனும் ஆனா பத்திரமாக.

சரி சார் எதாவது ஹாட் டிப்ஸ் சொல்லுங்க, இன்ட்ரா டே டிப்ஸ் சொல்லுங்க பணத்தை அள்ளி குமிச்சுருவோம்னு கேக்குறவங்களுக்கு சாரி சார் மொதல்ல இது தான் பெல், இது தான் பிரேக், இது தான் பெடல்னு ஒரு இன்ட்ரோ குடுத்துடுவோம் அப்புறம் ரேசுக்கு போவோம்.

இது பங்கு சந்தை பற்றிய மிக அடிப்படை தகவல்கள் மற்றும் அதை எப்படி அணுகினால் நல்லது நஷ்டம் வராமல் முதலீடை பாதுகாப்பது மற்றும் இதை பற்றிய இணைய தளங்களின் லிங்க்கள் போன்ற பல விசயங்களை பற்றி இங்கு போரடிக்காம சில பல உதாரணங்களுடன் பார்ப்போம்.

பல இடங்களில் நான் ஆங்கில சொற்களையே தமிழில் எழுதி இருப்பேன் ஏன் என்றால் அவைதான் சாதாரணமாக வழக்கத்தில் உபயோகிக்கப் படும் வார்த்தைகள். அவற்றிர்கு தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட வார்த்தைகள் இருந்தாலும் பணிரெண்டாம் வகுப்பு வரை தமிழில் படித்த மாணவன் கல்லூரி போனதும் எல்லாம் ஆங்கிலம் எனும் போது எப்படி குழப்பமாக இருக்குமோ அப்படி குழப்பமே மிஞ்சும்.

என்னுடைய இன்னொரு வலைப்பூ பார்க்க இங்க க்ளிக் பண்ணுங்க.

Posted in Labels: |