பங்கு சந்தை பாடம் சொன்னது - யாருக்கு?

பங்கு சந்தையை முதலீடு செய்யும் இடமாகவே பார்க்கவேண்டும். நான் முதலிலிருந்தே இதைத்தான் சொல்லிவருகிறேன். இரண்டு நாட்களாக சந்தை விழுந்து வருகிறது இந்நிலையில் இன்று காலை தமிழ்மணத்தில் ஒரு பதிவு கண்ணுக்கு தென்பட்டது ‘நடுத்தர வர்க்க யுப்பிகளுக்கு ஆப்பு வைத்த பங்கு சந்தை - அசுரனின் பதிவு’ என ஆகா எதோ நமக்கு வேண்டிய மேட்டர்தான் போல என்ன இருக்குன்னு பாக்கலாம்னு போய் பாத்தேன் அந்த சுட்டில நீங்களும் பாருங்க. ஒவ்வொரு முறை சந்தை விழும்போதும் வரும் புலம்பல்தான் இது. இதற்கு நாம் பதில் சொல்வதை விட இன்று சந்தையே 800 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து பதில் சொல்லிவிட்டது.

இன்று தமிழ்மணத்தில் பார்த்த இன்னும் இரு பதிவுகளின் சுட்டி கீழே.

பங்குசந்தை விழும்போதெல்லாம் கும்மியடிக்கும் கம்யூனிஸ்ட்கள் – தமிழ்மணியின் பதிவு

பங்கு சந்தை இனி ரத்த ஆறு ஓடட்டும் – செல்வனின் பதிவு

இந்த சுட்டிகளெல்லாம் எதெற்கென்றால் எவ்வளவுக்கெவ்வளவு படிக்கிறோமோ அவ்வளவு நம்மை கூர் தீட்டிக்கொள்ளத்தான்.

நம்ம ஊர் பக்கம் ஒரு பழமொழி சொல்வாங்க
“தினைக்கும் பிச்சை போடுற wxyz இன்னைக்கு போடலை
என்னிக்குமே போடாத மஹாலட்சுமி நீ போட்ட” – அப்பிடின்னு அது போல சந்தை பணத்தை அள்ளிக்கொடுத்த போதெல்லாம் சத்தமில்லாமல் இருந்துவிட்டு சரியும் போது கூக்குரலிடுவது அபத்தமாக இல்லை?

2005 ஆகஸ்ட்டில் சென்செக்ஸ் 7000 புள்ளிகளை தாண்ட சிரமப்பட்டது அப்போது அதுதான் உச்சம் ஆனால் இன்றைய நிலையில் சென்செக்ஸின் உச்சம் 21000 அது சற்றே இறங்கி நேற்றைய முடிவு 16720 புள்ளிகள் இன்று காலையிலிருந்தே 1000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து முடிவில் 811 புள்ளிகள் உயர்வாக 17540 புள்ளிகளில் முடிவடைந்துள்ளது.

ஏறுவதும் இறங்குவதும்தான் சந்தையின் இயல்பு. இந்த சரிவெல்லாம் தற்காலிகம்தான். 2005ல் முதலீடு செய்தவர்களுக்கு இப்போதைய சரிவு எப்படி பாதிக்காதோ அது போல முதலீட்டாளர்களை அது என்றுமே பாதித்ததில்லை பாதிக்கவும் பாதிக்காது. இழந்தது லாபத்தில் ஒரு சிறிய அளவே.

10% சந்தை சரிவதும் சந்தை 1 மணி நேரம் நிறுத்தப்படுவதும் முதல் தடவையா இல்லை இது கடந்த மூன்று வருடங்களிலேயே இது மூன்றாவது தடவை. எல்லா சரிவின் போதும் LIC, UTI மட்டுமே பங்குகளை வாங்கி சந்தையை தூக்கி நிறுத்தினால் சந்தை சரிவிற்கு அவர்களை தவிர வேறு யாரும் காரணமாக இருக்க முடியாது.

தின வணிகத்தை சூதாட்டம் என்று சொன்னாலும் தின வணிகம் இல்லை என்றால் எல்லோரும் டீமேட் ஸ்டேட்மெண்டை வைத்துக்கொண்டு நாக்கு வழிக்க வேண்டியதுதான் தேவையான சமயத்தில் டீமேட்டில் இருப்பதை பணமாக்க முடியாது.

பாதிக்கப்பட்டவர்கள் என பார்த்தால் சூதாட்ட நோக்கத்தில் ஒரு மாதத்தில் இரண்டு மடங்காக்கிவிடலாம் அது இது என சந்தையை பற்றி தெரியாமல் மற்றவர்களின் ஆலோசனை பெயரில் சந்தையில் என் புருசனும் கச்சேரிக்கு போறான் என இறங்கியவர்களே.

ஈக்விடி என்பது உங்களுக்கு நீங்கள் பங்கு வைத்திருக்கும் நிறுவனத்தில் உள்ள உரிமையை குறிப்பது உங்களிடம் உள்ள பங்கின் அளவை பொறுத்து. முதலீட்டு நோக்கோடு மட்டும் சந்தையை அணுகுங்கள்.

பொறுமை காக்கும் நேரம் இது - தென்றல்.

Posted in Labels: |

ஹாட் டிப்ஸ்

அனைவருக்கும் கொஞ்சம் தாமதமான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். என்னுடைய இன்னொரு வலைப்பூவில் நூறாவது பதிவு மற்றும் புத்தாண்டு பதிவு எல்லாம் போட்டு கொண்டாடிட்டு இங்க வர கொஞ்சம் லேட்டாயிடிச்சு.

இப்பெல்லாம் ஆபீஸ்லயும் சரி ஆபீஸ்க்கு வெளியிலயும் சரி நாலுபேர் சேர்ந்து பேச ஆரம்பிச்சாலே ஸ்டாக் மார்க்கெட் பத்திதான் இப்ப நடந்துகிட்டிருக்கிறது ‘செகுலர் புல்’லாம் எப்பாடா என்னாமா கண்டுபிடிக்கிறாய்ங்கய்யா!! பங்கு சந்தை குறியீட்டு எண் இன்னும் மூணு – நாலு வருசத்துக்கு இப்பிடியே ஏறுமுகமா இருக்குமாம் நடு நடுவே சின்ன சின்ன சரிவுகள் வந்தாலும் அதையெல்லாம் தாண்டி.

யாரப்பாத்தாலும் அதை வாங்கினியா இதை வாங்கினியா இந்த ஸ்டாக் அடுத்த வாரம் பார் பறக்க போகுது. ஒருத்தர் ஒரு பங்கை ரெக்கமண்ட் சொல்லி நாம வாங்காம தப்பி தவறி அது மேல போகுதுன்னு வைங்க உடனே அதான் நாங்க அப்பவே சொன்னம்ல. எனக்கு இந்த விளையாட்டிலெல்லாம் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை.

எனக்கு ஒரு ‘நல்ல’ கம்பெனி பங்கு வாங்கனும்னு தோணினா அத கவனிச்சு விலை குறையும்போது ஒரு சிறு அளவு வாங்கி அதன்பிறகும் விலைகுறைந்தால் திரும்பவும் ஒரு சிறு அளவு வாங்கி சேர்த்து வைத்து மூன்று மாதமானாலும் சரி ஆறு மாதமானாலும் சரி கழுதை பிக்ஸட் டெபாசிட் போட்டா வெயிட் பண்றதில்லையா கெடந்துட்டு போகட்டுமே அப்படிங்கிற இது என்ன ஊசிப்போகிற பொருளா!? இந்த அடிப்படையில தான் நான் பங்கு வர்த்தகம் செஞ்சுகிட்டு வரேன்.

என் ப்ரெண்ட்ஸ் சில சமயம் கிண்டல் செய்வதும் உண்டு அதுக்கெல்லாம் நான் கொஞ்சம் கூட கவலைப்பட மாட்டேன் சில நாட்கள் முன் என் நண்பர் ஒருவரை சந்திச்சப்ப நலமெல்லாம் விசாரிச்சு டீ எல்லாம் சாப்பிட்டதுக்கப்புறம் எப்பிடி போயிட்டிருக்கு உன்னோட ஷேர் அப்படின்னு பேச்சு திருப்பிச்சு இல்லடா எல்லாம் விட்டுட்டேன் அந்த பக்கமே போகறதில்ல ஒரு நாலரை லட்சரூவா நஷ்டம் ‘எப் & ஓ’ ல அப்படின்னார். எனக்கு ‘எப் & ஓ’ பற்றி ஒரு எல்.கே.ஜி மாணவனுக்கு அறிவு எவ்வளவோ அவ்வளவுதான் அதை பற்றி இத்தனைக்கும் என்னுடைய ‘ப்ரோகரேஜ் ஹவுஸ்’ இலவசமா பாடம் எல்லாம் நடத்துனாங்க அதுக்கப்புறமும், அதனால் அந்த பக்கமே தலை வெச்சு படுக்காம இருந்தேன். இவன் எப்ப அந்த பக்கம் போனான் ஏன் இப்படி ஆச்சு ஒண்ணும் புரியலை ஆனா ரொம்ப வருத்தமா ஆயிடிச்சு.

அதுபோல இந்த கம்மோடிடிஸ் , டெரிவேடிஸ் டிரேடிங்கும் ஒண்ணும் பிடிபடமாட்டிங்கிது உளுந்து, சோயா, தங்கம், வெள்ளி, நிக்கல் எல்லாம் எதையுமே டெலிவரி எடுக்காமலே வாங்கி வாங்கி விக்கலாமாம் மார்ஜின்ல. நான் கிராமத்துல வளந்தவன்கிறதுனால உளுந்து செடிய பாத்திருக்கேன், இட்லி தோசைக்கு பயன்படுத்துவாங்க இதுதான் உளுந்து பத்தி அதிகபட்சம் எனக்கு தெரிஞ்சது.

டெரிவேடிஸ்ங்கிறது கரன்சி ட்ரேடிங்காம் தெனைக்கும் மாறுபடற கரன்சி விலை வித்தியாசத்தை பயன்படுத்தி லாபம் சம்பாதிக்கலாமாம். ஒருவேளை இதை மட்டுமே தொழிலா செய்ய ஆரம்பிக்கும்போது பாத்துக்கலாம்னு இந்த பக்கமும் இன்னும் போகலை.

நேத்து அதாவது 4-1-08 வெள்ளிக்கிழமை என் செல்போன் அரைமணிக்கொருதரம் கொய்ங், கொய்ங், கொய்ங்னு எஸ்.எம்.எஸ்ஸா வந்திட்டிருக்கு என்னன்னு பாத்தா www.towerteammumbai.com னு ஒரு சர்வீஸ்ல இருந்து ஏழு நாள் ஃப்ரீ டரையலாம் அன்பு நண்பர்கள் யாரோ அவங்களுக்கு ரெஜிஸ்டர் பண்றப்ப இலவசம்தானே எங்க அண்ணனுக்கும் அனுப்புன்னு என் நம்பரையும் போட்டு விட்டுட்டாங்க போல.

ஒரு காலத்துல பங்குசந்தைல பயந்து பயந்து கால் வெச்ச சமயம் நாம பாட்டுக்கு எதாவது ஒரு கம்பெணி ஷேரை வாங்கி அது ஏடாகூடமாயிடிச்சினா என்ன பண்றதுன்னு ஆறு மாசத்துக்கு இரண்டாயிரம் ரூவா பணம் கட்டி ‘பவர் யுவர் ட்ரேட்’ டாட் காம்’ல சேர்ந்து சோரம் போனவங்க நாம!! இப்பல்லாம் திகட்ட திகட்ட டிப்ஸ் இலவசமாவே கிடைக்குது மோதிலால் ஓஸ்வால், ஐசிஐசிஐ டைரக்ட், ஆர் மணி, பங்குவணிகம் , சுதாகர் வலைப்பூ இதெல்லாம் இல்லாம எந்த ப்ரெண்டை மீட் பண்ணாலும் டிப்ஸ்.

கூட்டி கழிச்சி பாத்தா சில நண்பர்கள் இந்த ‘எப் & ஓ’ அது இதுன்னு விழுந்து பெரண்டு செய்யற லாபத்தைவிட ஒண்ணுமே செய்யாம ப்ளாக் எழுதிகிட்டு கமெண்ட் போட்டுகிட்டு ஜாலியா என்ஞாய் பண்ணிகிட்டிருக்க நான் எந்த விதத்திலும் % கொறைஞ்சே போயிடலை இன்னும் சொல்ல போனா என் சைடு கொஞ்சம் ஸேஃப்.

எல்லாம் சரி பிப்ரவரில இருந்து MF, FI எல்லாம் ஷார்ட் செல்லிங் அனுமதிக்கலாம்னு செபி முடிவு பண்ணியிருக்காம். எப்பிடியும் வருச கடைசிக்குள்ள சென்செக்ஸ் இருபத்திஐயாயிரம் பாயிண்ட் தாண்டீடுமாம். இது நான் உங்களுக்கு சொல்ற ஹாட் டிப்ஸ் இல்ல ஆறிப்போன டிப்ஸ்தான் இது.

Posted in Labels: |