புதியவர்களுக்காக - 4

பங்கு சந்தையை பொருத்தவரை எவ்வளவுக்கு எவ்வளவு விரைவாக கற்றுக்கொள்கிறோமோ அவ்வளவு நல்லது.

தவறுகள் செய்ய செய்ய நம் முதலீட்டின் / லாபத்தின் அளவை இழக்கிறோம். எல்லா விசயங்களையும் நாம் அனுபவித்துதான் தெரிந்துகொள்ளவேண்டும் என்பது இல்லை.

சில வருடங்களுக்கு முன் தமிழ்சசியின் பதிவில் படித்த ஒரு விசயம் நினைவிற்கு வருகிறது. பங்கு சந்தை சூதாட்டமா? எனும் தலைப்பில் அவர் எழுதியது. சீட்டாட்டம் ஒரு சூதாட்டம் அதற்கே நாம் எவ்வளவோ விதிமுறைகளை வைத்துள்ளோம் 13 சீட்டுதான் போட வேண்டும், ஒரு ஒரிஜினல் ரம்மி இருக்க வேண்டும், முதலிலேயே கவிழ்த்துவிட்டால் வெறும் 20 பாயிண்ட்கள் ஃபுல் என்றால் 80 பாயிண்ட்கள் இப்படி பல.

சூதாட்டத்திற்கே இவ்வளவு விதிமுறைகள் இருக்கும் போது பங்கு வர்த்தகத்தில் நாம் எந்த விதிமுறையையும் பின்பற்றாமல் நடந்தால் தோல்வியே மிஞ்சும்.

எனவே நிறைய படியுங்கள். படித்தவற்றிலிருந்து சில விதிமுறைகளை ஏற்பாடுத்திக்கொள்ளுங்கள். அதை மீறாமல் நடந்து வெற்றி பெறுங்கள்.

நண்பர் ஒருவரின் பங்கு சந்தை அனுபவங்கள். படிக்க வேண்டிய அருமையான பதிவு லிங்க் கீழே

http://rktimes.blogspot.com/2007/10/blog-post_17.html

http://rktimes.blogspot.com/2007/10/blog-post_18.html

Posted in Labels: |